ரூ.16,600 கோடி ஐபிஓ.. பங்குச்சந்தையை கலக்க வரும் பேடிஎம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம் நீண்ட காலமாகத் திட்டமிட்டு வந்த தனது கனவு ஐபிஓ திட்டத்தின் முதல் படியை எடுத்து வைத்துள்ளது. விஜய் சேகர் சர்மா தலைமையிலான பேடிஎம் இந்தியாவின் மிகப்பெரிய நிதியியல் சேவை நிறுவனமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பேடிஎம் நிறுவனம் சோமேட்டோ நிறுவனத்தின் மாபெரும் ஐபிஓ சாதனையை முறியடிக்கும் விதமாகச் சுமார் 16,600 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் DRHP அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

ரூ.60,000 வரையில் வட்டியில்லா கடன்.. பேடிஎம் போஸ்ட்பெய்டு அசத்தல் சலுகை.. எப்படி பெறுவது..! ரூ.60,000 வரையில் வட்டியில்லா கடன்.. பேடிஎம் போஸ்ட்பெய்டு அசத்தல் சலுகை.. எப்படி பெறுவது..!

 விஜய் சேகர் சர்மா - பேடிஎம் சிஇஓ

விஜய் சேகர் சர்மா - பேடிஎம் சிஇஓ

விஜய் சேகர் சர்மா தலைமையிலான பேடிஎம் நிறுவனம் இந்த ஐபிஓ திட்டத்தில் பிரஷ் இஸ்யூ மூலம் 8,300 கோடி ரூபாயும், ஆஃபர் பார் சேல் பிரிவில் 8,300 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டையும் திரட்ட முடிவு செய்து செபியிடம் விண்ணப்பம் செய்துள்ளது. பல்வேறு காரணிகளை ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் செபி இதற்கு ஒப்புதல் அளிக்கும்.

 சீன நிறுவனங்கள் மற்றும் முதலீடுகள்

சீன நிறுவனங்கள் மற்றும் முதலீடுகள்

இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கும், சீன முதலீடுகளுக்கும் எதிரான ஒரு மனநிலை இருக்கும் வேளையில் பேடிஎம் நிறுவனத்தில் சீனாவின் அலிபாபா மற்றும் ஆன்ட் பைனான்சியல் நிறுவனங்கள் பெரும் பகுதி பங்குகளை வைத்திருக்கும் நிலையில், செபி மற்றும் மத்திய அரசு பேடிஎம் நிறுவனத்தின் ஐபிஓ-வை எப்படிக் கையாளப்போகிறது என்பது முக்கியமாகக் கேள்வியாக உள்ளது.

 பிரம்மாண்ட் ஐபிஓ

பிரம்மாண்ட் ஐபிஓ

பேடிஎம் நிறுவனத்தின் இந்தப் பிரம்மாண்ட ஐபிஓ-வை மோர்கன் ஸ்டான்லி, கோல்மேன் சாச்சஸ், ஆக்சிஸ் கேப்பிடல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நிர்வாகம் செய்ய உள்ளது. சோமேட்டோ நிறுவனத்தைப் போலவே பேடிஎம் நிறுவனமும் ரீடைல் பிரிவில் குறைந்த அளவிலான பங்குகளை மட்டுமே ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சீனா மற்றும் ஜப்பான்

சீனா மற்றும் ஜப்பான்

பேடிஎம் நிறுவனத்தில் தற்போது இருக்கும் நிலவரத்தின் படி ஆன்ட் குரூப் மட்டும் 30.33 சதவீத பங்குகளை வைத்துள்ளது, ஜப்பான் சாப்ட் பேங்க் 18.73 சதவீத பங்குகளையும், விஜய் சேகர் சர்மா 14.97 சதவீத பங்குகளையும், அலிபாபா 7.32 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.

 ரத்தன் டாடா, வாரன் பபெட்

ரத்தன் டாடா, வாரன் பபெட்

மேலும் ரத்தன் டாடா, வாரன் பபெட் ஆகியோரும் தனிப்பட்ட முறையில் பங்குகளை வைத்துள்ளனர், இந்த ஐபிஓ திட்டத்தில் இவ்விருவரும் தங்களது பங்குகளை விற்பனை செய்வார்கள் என் எதிர்பார்க்கப்படுகிறது.

 பேடிஎம் பிரச்சனை

பேடிஎம் பிரச்சனை

பேடிஎம் நிறுவனம் தொடர்பாக 1.6 கோடி ரூபாய் மதிப்பிலான வருமான வரி தொடர்பான வழக்கும், 25 கிரிமினல் மற்றும் 40 வரி மோசடி வழக்குகளும் பேடிஎம் நிறுவனம் மற்றும் அதன் தலைவர்கள் மேல் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Paytm files DRHP with Sebi for massive Rs 16,600 crore: Alibaba, Ant financial major investors

Paytm files DRHP with Sebi for massive Rs 16,600 crore: Alibaba, Ant financial major investors
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X