மீண்டும் சமையல் எரிவாயு விலை ஏற்றம்... ஆனால் தமிழக இல்லத்தரசிகள் நிம்மதி!

ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதும் இதனால் ஒவ்வொரு மாதம் ஒன்றாம் தேதி வரும் போது இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியில் இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே.

ஆகஸ்டு 1ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டாலும் வீடுகளுக்கு உபயோகப்படுத்தப்படும் சிலிண்டரின் விலை குறைக்கப்படவில்லை என்பது இல்லத்தரசிகளுக்கு அதிருப்தியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெல்லி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் குழாய்கள் மூலம் அனுப்பப்படும் சமையல் கேஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் தகவல் அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் குழாய்கள் மூலம் சமையல் கேஸ் அனுப்பப்படும் வசதி தமிழ்நாட்டில் இல்லை என்பதால் தமிழக இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

குழாய் சமையல் எரிவாயு

குழாய் சமையல் எரிவாயு

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் போராடி வரும் இந்த நேரத்தில் தலைநகர் டெல்லி மற்றும் அதை ஒட்டிய நகரங்களில் உள்ள வீட்டு சமையலறைகளுக்கு குழாய் மூலம் அனுப்பப்படும் சமையல் எரிவாயுவின் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.2.63 உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குழாய் மூலம் சமையல் எரிவாயு விலை

குழாய் மூலம் சமையல் எரிவாயு விலை

டெல்லியில் குழாய் மூலம் சமையல் எரிவாயுவின் விலையானது, ஸ்டாண்டர்ட் க்யூபிக் மீட்டருக்கு ரூ. 47.96 ஆக இருந்தத். இந்த நிலையில் இந்த விலை ரூ.50.59 என தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திரபரஸ்தா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள வீடுகளுக்கு சிஎன்ஜி மற்றும் குழாய் மூலம் சமையல் எரிவாயுவை விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும்.

விலை உயர்வு

விலை உயர்வு

டெல்லியில் குழாய் மூலம் சமையல் எரிவாயுவின் விலையானது, ஸ்டாண்டர்ட் க்யூபிக் மீட்டருக்கு ரூ.50.59 ஆக இருக்கும். இது முன்பு ரூ. 47.96 ஆக இருந்தது என்று இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது - கார்களுக்கு சிஎன்ஜி மற்றும் தேசிய தலைநகர் மற்றும் அருகிலுள்ள நகரங்களில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு சில்லறை விற்பனை செய்யும் நிறுவனம்.

விளக்கம்

விளக்கம்

இதுகுறித்து IGL விளக்கமளித்தபோது, 'அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யவும், இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த எல்என்ஜியை பயன்படுத்த அரசு கட்டாயப்படுத்தியதால் இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இரண்டு வாரங்களில் இரண்டாவது உயர்வு

இரண்டு வாரங்களில் இரண்டாவது உயர்வு

இரண்டு வாரங்களுக்குள் இது இரண்டாவது விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஜூலை 26-ம் தேதி யூனிட்டுக்கு ரூ.2.10 விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரூ.2.63 உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய விலை

புதிய விலை

டெல்லியை ஒட்டியுள்ள நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் PNG ஒரு க்யூபிக் மீட்டருக்கு ரூ.50.46 ஆகவும், குருகிராமில் ரு.48.79 ஆகவும் இருக்கும் என்றும் உள்ளூர் வரிகளை பொறுத்து விலையில் சில மாற்றங்கள் இருக்கும் என்று IGL தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+