பிரதமர் நரேந்திர மோடி-யின் 2வது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் கடைசி முழுப் பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் 2022-23ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் வளர்ச்சி மற்றும் பணவீக்கம் குறித்து முக்கியமான தகவல்களை வெளியிட்ட மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தனியார் நுகர்வு குறித்து முக்கியமான அறிவிப்பை இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தனியார் நுகர்வு
இந்திய ஜிடிபி-யில் தனியார் நுகர்வு அளவு 2023 ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் 58.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டு முதல் இதுதான் அதிகப்படியான 2வது காலாண்டு வளர்ச்சி என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தடாலடி உயர்வு
இந்த தடாலடி உயர்வுக்கு முக்கியமான காரணம் கொரோனா தொற்றில் இருந்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் தொடுதல் சார்ந்த துறையில் இருக்கும் அனைத்து துறைகளும் அதிகப்படியான வர்த்தகத்தை பெற்றது. இதில் ஹோட்டல், டிரான்ஸ்போர்ட் ஆகியவை அடக்கம்.
வேகமாக வளரும் பொருளாதாரம்
உலகெங்கிலும் உள்ள ஏஜென்சிகள் இந்தியா 2023 ஆம் நிதியாண்டில் 6.5-7.0 சதவீதமாக வளர்ச்சி அடைந்து உலகிலேயே வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக அறிவித்து வருகிறது. இந்த நம்பிக்கையான வளர்ச்சிக் கணிப்புகளுக்கு மிக முக்கியமான காரணம் இந்தியப் பொருளாதாரத்தில் தனியார் நுகர்வில் பெரிய அளவில் மீண்டு வருவது தான்.
ஏற்றுமதி
தனியார் நுகர்வு அதிகரிக்கும் காரணத்தால் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றுமதி தான் முக்கியமான தூண் என்பதில் இருந்து சேவை துறை முக்கியதுவம் பெறுகிறது என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உற்பத்தி
தனியார் நுகர்வு அதிகரிப்பு மூலம் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது, இதன் விளைவாக அனைத்து துறைகளின் உற்பத்தி திறன்தகள் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது.
வேக்சின் பாதுகாப்பு
இந்தியாவில் வேக்சின் பாதுகாப்பு, லாக்டவுன் கட்டுப்பாடுகள் வேகமாக மேம்பட்ட நிலையில் 2வது காலாண்டு காலக்கட்டத்தில் உணவகங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் போன்ற தொடுதல் அடிப்படையிலான சேவைகளில் செலவழிக்க மக்களை மீண்டும் தூண்டியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications