2014-ம் ஆண்டு, முதல் முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்ற பின், திட்டக் குழுவைக் கலைத்து விட்டு நிதி ஆயோக்கை நிறுவினார்கள்.
இந்த நிதி ஆயோக் தான் இந்தியாவின் பல முன்னணி திட்டங்களை வடிவமைத்துக் கொண்டு இருக்கிறது. இப்போது இந்திய ரயில்வேஸுக்குச் சொந்தமான ரயில்களை, தனியார் இயக்க ஐடியா கொடுத்த முக்கிய நபர்களில், இவர்களும் ஒரு குழு.
இந்த 150 ரயில்கள் தனியார் இயக்க அனுமதி கொடுக்கும் தனியார்மய நடவடிக்கையில் சில செக்குகளையும் கூடவே வைத்திருக்கிறது நிதி ஆயோக்.
முதலீடு
'Private Participation: Passenger Trains' என்கிற தலைப்பில், நிதி ஆயோக் ஒரு பேப்பரை விவாதித்து இருக்கிறார்கள். இந்த பேப்பரில் ஆலோசித்த திட்டப் படி, இந்திய ரயில்வேஸுக்குச் சொந்தமான 100 ரயில் வழித் தடங்களில் இயங்கும், 150 ரயில்களை தனியாருக்கு திறந்து விட இருக்கிறார்கள். இதன் மூலம் சுமார் 22,500 கோடி ரூபாய் முதலீடுகள் வருமாம்.
வழித் தடங்கள்
சென்னை - ஓக்லா (கிழக்கு டெல்லி),
ஹவுரா - சென்னை,
செகந்தராபாத் - கெளஹாத்தி,
மும்பை சென்ட்ரல் - நியூ டெல்லி,
நியூ டெல்லி - பாட்னா,
அலஹாபாத் - புனே,
தாத்ரா - வதோதரா,
ஹவுரா - பாட்னா,
இந்தூர் - ஓக்லா,
லக்னெள - ஜம்மு தவி,
ஆனந்த விஹார் - பகல்பூர்,
ஹவுரா - ஆனந்த் விஹார். போன்ற முக்கிய வழிதடங்களும் தனியார் இயக்கத்துக்கு திறந்து விட இருக்கிறார்களாம்.
வெளிநாட்டுக் காரர்களுக்கும்
இந்த 100 வழித் தடங்களை 10 - 12 குழுக்களாகப் பிரிக்கப் போகிறார்களாம். இந்த வழித் தடங்களில் ரயில்களை இயக்க, உள்நாட்டு தனியார் கம்பெனிகளோ அல்லது வெளிநாட்டு தனியார் கம்பெனிகளோ யார் வேண்டுமானாலும் வரலாமாம். ஒரு கம்பெனி அதிகபட்சம் 3 குழுக்களில் ரயில்களை இயக்க அனுமதி பெறலாமாம்.
பயணக் கட்டணம்
தனியார் கம்பெனிகள் (உள்நாடு & வெளிநாடு) , சந்தை நிலவரத்தைப் பொறுத்து கட்டணங்களை வசூலிக்கலாமாம். இதை ஆங்கிலத்தில் ‘The private operator will have the right to collect market-linked fares' எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆக, ரயில்கள் இயக்கம், தனியார் கைக்குச் சென்ற பின், ரயில் பயணச் சீட்டு விலை, இன்னும் ஏற்றம் காணலாம் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.
இஷ்டத்துக்கு பெட்டி
அதோடு "The private operators will be provided flexibility of class composition and halts" எனவும் ஒரு வரியை இணைத்து இருக்கிறார்கள். ஆக, ஒரு ரயிலில் என்ன மாதிரியான பெட்டிகள் இருக்க வேண்டும், எந்த ரயில் நிலையங்களில் எல்லாம் நிறுத்த வேண்டும் என்பதைக் கூட தனியார் கம்பெனிகள் முடிவு செய்ய முடியும் போலிருக்கிறதே.
தேவை தானா
இப்படி தனியார் கம்பெனிகளுக்கு, இந்திய ரயில்வேஸ், எல்லா கதவுகளையும் திறந்துவிட்டு, என்ன லாபம் அடைய இருக்கிறோம் என்று கேட்டால் "புதிய டெக்னாலஜிக்கள் ரயில்வே துறைக்கு வரும், புது வகையான ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகள் எல்லாம் வரும்" எனச் சொல்கிறார்கள் அரசு தரப்பினர்கள்.
ஏழைகள் ஜாக்கிரதை
புதுமையை வரவேற்கிறோம். அதற்காக விலை நிர்ணயம், பெட்டிகளை நிர்ணயிப்பதை எல்லாமா தனியாருக்கு தாரை வார்ப்பது..? இந்தியா பணக்காரர்களைக் கொண்ட நாடு அல்ல. 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள், கூலித் தொழிலாளர்களகத் தான் தன் பிழைப்பை நடத்திக் கோண்டு இருக்கும் நாடு எனபதை, அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக் கொள்ளுமென நம்புவோம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications