பாமர மக்களைக் கூட, டீமானிட்டைசேஷன் மற்றும் ஜிஎஸ்டி போன்றவைகளைக் கொண்டு வந்து பொருளாதாரம் பேச வைத்த பெருமை பாரதிய ஜனதா கட்சி அரசையே சேரும்.
மக்கள் பொருளாதார செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டதால், தற்போது இந்திய பொருளாதாரம் வளர்ச்சியைக் குறித்தும் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
மக்கள் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி பேசத் தொடங்கிய நேரமோ என்னமோ, இதிய பொருளாதாரம் ரிவர்ஸ் கியர் போட்டு பயணிக்கத் தொடங்கிவிட்டது. ஆதாரம் கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 4.5 சதவிகிதம் மட்டும் வளர்ந்து இருப்பது. இவ்வளவு மோசமான வளர்ச்சியில் இருந்து மீள என்ன செய்யலாம் என ரகுராம் ராஜன் தன் யோசனைகளைச் சொல்லி இருக்கிறார்.
நில சீர் திருத்தம்
1. நிலம் சார்ந்த கணக்குகளையும், நிலம் யாருக்குச் சொந்தம் போன்ற பதிவுகளையும் விரைந்து முடிக்க வேண்டும். குறிப்பாக ஏழ்மையான மாநிலங்களில் இந்த வேலைகளை விரைந்து முடிக்கச் சொல்கிறார்.
2. நிலப் பதிவு (Land Registration), நில பிராந்தியங்களைப் பிரிப்பது (Land Zoning), நிலப் பிராந்தியங்களை மாற்றுவது (Alter Land zone) போன்ற நடவடிக்கைகளுக்கு வெளிப்படையான செயல்முறைகள் தேவை.
3. நிலத்தை கையகப்படுத்துவதை (Land Acquisition) மிக மிக அரிதாக மாற்ற வேண்டும்.
4. நிலத்தை கையகப்படுத்தும் நடைமுறைகளையும் எளிதாக்க வேண்டும் நச் சொல்லி இருக்கிறார்.
தொழிலாளர்
1. தொழிலாளர் சார்ந்த ஒப்பந்தங்களை தளர்வுபடுத்த வேண்டும்.
2.Intermeidate contract-க்களைச் செயல்படுத்த, சட்டங்களைக் கொண்டு வர சொல்கிறார். இந்த intermeidate contract வந்தால், ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்கிற அவசியம் ஏற்படாது. ஆனால் பணி அனுபவத்துக்கு தகுந்தாற் போல தொழிலாளர்களுக்கான உரிமைகளைப் பெறுவார்கள் எனச் சொல்லி இருக்கிறார்.
அதிகாரப் பகிர்வு
1. ஒவ்வொரு அமைச்சகத்தையும் தன் அதிகாரத்துடன் செயல்பட விட வேண்டும்
2. மாநில அரசுகளையும் பங்கு பெறச் செய்ய வேண்டும்.
3. 15-வது நிதி ஆணையத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை (Terms of Reference) அமல்படுத்த வேண்டும்.
4. மாநில அரசின் வரி வருவாய்களைத் தடுக்காதீர்கள் எனச் சொல்லி இருக்கிறார்.
முதலீடுகள்
1. வரி மற்றும் நெறிமுறைகளை (Regulatory) நிலைப்படுத்த வேண்டும். அதோடு அவைகளை எளிதில் கணிக்கும் விதத்தில் இருக்க வேண்டும்.
2. அரசு கொண்டு வர நினைக்கும் மாற்றங்களை பொது வெளியில் விவாதிக்க வேண்டும்.
3. மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், அந்த மாற்றங்களை தொழில் துறையினர் பின்பற்ற போதுமான கால அவகாசத்தைக் கொடுக்க வேண்டும்.
Disinvestment - சொத்துக்களை விற்பது
1. Disinvestment என்பது வெறுமன நிதி திரட்டுவதற்கு அல்ல. ஆக பொதுத் துறை நிறுவனங்களை விரைவாக விற்க வேண்டாம்.
2. குறிப்பாக பொதுத் துறை நிறுவனங்களை முன்னணி பிசினஸ் குடும்பங்களுக்கு விற்க்க வேண்டாம். இந்த விற்பனை தவிர்ப்பால், ஒரே குடும்பத்திடம் அதிகாரம் குவிவதை தடுக்கலாம் என தன் அறிவுரைகளைக் கொடுத்து இருக்கிறார்.
இந்த அறிவுரைகளை மத்திய அரசு ஏற்குமா..?
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications