மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும் சகஜமான விஷயம் தான். ஆனால் சிலரின் மறைவினை ஊரே பேசும். அந்தளவுக்கு இன்று பேசுப்படுவர் ராகுல் பஜாஜ்.
பஜாஜ் நிறுவனத்தின் ஆணி வேராக இருந்த ராகுல் பஜாஜ் சனிக்கிழமையன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
கொல்கத்தாவில் பிறந்த ராகுல், ஒரு வணிக குடும்பத்தை சேர்ந்தவர். அதனால் அவரின் ரத்தத்திலேயே கலந்துள்ளது வணிக ரத்தம். அமெரிக்காவில் ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ படித்தவர்.
பஜாஜ் தலைவர்
படிப்பினை முடித்த கையோடு பஜாஜ் நிறுவனத்தில் துணை பொது மேலாளாராக பதவியேற்றார். அதன் பிறகு கடின உழைப்புக்கு மத்தியில் 1968ல் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார். பஜாஜ் நிறுவனத்தின் பொறுப்பினை ஏற்பதற்கு முன்பு வரையில், பஜாஜ் நிறுவனம் இரு சக்கர வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்து வந்தது.
பஜாஜ் நிதிச் சேவைகள்
ஆனால் அதன் பிறகு இன்சூரன்ஸ், நிதித்துறை, பல்வேறு பொருட்கள் உற்பத்தி என பல தொழில்களிலும் காலூன்றியுள்ளார்.
இதன் சந்தை மதிப்பு 8.4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கொண்ட ஒரு மாபெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. பஜாஜ் குழுமத்தின் மதிப்பீட்டில் சுமார் 80% நிதிச் சேவைகளான பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பஜாஜ் பின்சர்வ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நிதி வணிகம்
நாட்டிலுள்ள ஒவ்வொரு வணிக குழுமமும், உள் நிதிச் சேவை நிறுவனத்தினை கொண்டுள்ளன. இது வாகனத் தொழிலுக்கு தேவையான நிதியினை வழங்குகிறது. இவை உற்பத்தி வணிகத்துடன் இணைக்கப்படுகின்றன. இது பெரிய வங்கிகளை விட, சிறு நிதி நிறுவனங்கள் பெரியளவிலான சிறு நிதி கடன் திட்டத்தினை உருவாக்க முடியும். இதன் ஆரம்ப நோக்கம் வாகன கடனுக்கு நிதியளிப்பதாக இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் நிதித் துறையில் பெரும் பங்கு அளிக்கிறது.
மூலதனம்
எனினும் கடந்த 2008ல் தனது இரு மகன்களான சஞ்சீவ் மற்றும் ராஜீவ் இடையேயான பொறுப்புகளை பிரித்து அளித்த போது, வாகன நிறுவனம் மற்றும் நிதி சேவை நிறுவனத்தையும் பிரித்தது. பிரித்தாலும் ஒவ்வொருவருக்கும் சுமார் 8,000 கோடி ரூபாய் மூலதனத்தினை கொண்டுள்ளது.
இப்படி தொழிற்துறையில் கடினமான உழைப்பாளியாக இருந்து வெற்றி பெற்ற ராகுல் பஜாஜ், தொழில் முனைவோரின் நலனுக்காக கடைசி வரை போராடியவர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications