கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியாவின் கடைசி மற்றும் பலமான ஆயுதம் சமூக விலகள் தான்.
அதனால் லாக் டவுனை மீண்டும் மே 03, 2020, ஞாயிற்றுக் கிழமை வரை நீட்டித்து இருக்கிறது மத்திய அரசு.
இந்த லாக் டவுன் 2.0-வால் பல தரப்பினரும் பல வகையில் பாதிக்கப்பட இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை.
ரயில்கள்
ஆனால், உயிருடன் இருப்பார்கள், அவர்கள் உடல் நலத்து பங்கம் ஏற்படாது என்பது தான் இந்த லாக் டவுன் 2.0 கொடுக்கும் ஒரு ஆறுதலான விஷயம். இந்த லாக் டவுனை அறிவித்த உடனேயே, ரயில்வேஸ் மே 03, 2020 வரையான அனைத்து ரயில்களையும் ரத்து செய்து இருக்கிறது.
ரயில் டிக்கெட்
ரயில்வேஸ், ஏப்ரல் 15 முதல் மே 03, 2020 வரை முன் பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளையும் ரத்து செய்ய இருப்பதாக லைவ் மிண்ட் பத்திரிகையில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த ஏப்ரல் 15 - மே 03 வரைக்குமான தேதிகளில், ரயில்களில் பயணம் செய்ய சுமார் 39 லட்சம் பயணச் சீட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டு இருந்தனவாம். இப்போது அத்தனை டிக்கேட்டுகளையும் ரத்து செய்ய இருக்கிறது ரயில்வேஸ்.
ரீ ஃபண்ட்
முன் பதிவு செய்த பயணிகளுக்கு முழு ரீஃபண்டடை ஐ ஆர் சி டி சி வழங்கும் எனவும் ரயில்வே நிர்வாகம் சொல்லி இருக்கிறது. அதே போல பயணச்சீட்டை முன் பதிவு செய்தவர்கள், தங்கள் டிக்கெட்களை ரத்து செய்ய வேண்டிய அரசியம் இல்லை, தானாகவே ரத்து செய்யப்பட்டு முழு தொகை ரீஃபண்ட் வழங்கப்படும் எனச் சொல்லி இருக்கிறது ரயில்வேஸ்.
முன் பதிவு சேவை ரத்து
அதோடு, அடுத்து அடுத்து வரும் தேதிகளுக்கான, முன் பதிவு சேவைகளையும் முழுமையாக ரத்து செய்து இருக்கிறது இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம். இதை நாம் டிக்கெட் புக் செய்ய முயற்சிப்பதற்கு முன்பே, ஐ ஆர் சி டி சி வலைதளத்தில் நுழையும் போதே தெளிவாக அலர்ட் செய்து விடுகிறார்கள். அந்த அலர்ட்டை மேலே படத்தில் பார்க்கலாம்.
120 நாள் கணக்கு
இன்று ஏப்ரல் 14, 2020 என்றால், ஆகஸ்ட் 16, 2020 வரை ரயில் டிக்கெட்களை பதிவு செய்ய, தேதிகளை தேர்வு செய்ய அனுமதிக்கிறது. ஆனால் ஏப்ரல் 14, 2020 முதல் 120 நாட்களை கணக்கிட்டால் ஆகஸ்ட் 12 வரை தான் வருகிறது.
எதுவரை ரத்து
இந்த இரண்டு தேதிகளிளும் முன் பதிவு செய்ய முயற்சித்தால், ஒரு சிவப்பு நிற அலர்ட் வந்து, முன் பதிவு ரத்து செய்யப்பட்டு இருப்பதாகச் சொல்கிறது. சுருக்கமாக, ரயில்வேஸில் இருந்து, அடுத்த அறிவிப்பு வரும் வரை ரயில் டிக்கெட் முன் பதிவு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications