டெல்லி: நாடு முழுவதும் 150 ரெயில்களை தனியாருக்கு விடுவதற்காக திட்ட வரைவு அறிக்கையை நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் 11 வழித்தடங்கள் உள்பட 100 வழித்தடங்களில் 150 தனியார் ரெயில்களை அடுத்த ஆண்டுக்குள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளததாகவும் கூறப்பட்டது.
இது சம்பந்தமாக நிதி ஆயோக் அறிக்கையில் தனியார் ரயில்களுக்கான தகுதி விவரங்கள், கட்டண நிர்ணயம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. சரி அப்படி என்ன தான் கண்டிசன்.. வாருங்கள் பார்க்கலாம்.
இவ்வளவு வேகத்தில் தான் போகணும்
தனியார் ரயில்கள் அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகம் வரை இயக்கிக் கொள்ளலாம். அதிலும் குறிப்பிட்ட வழித்தடங்களில் அதே வழித்தடங்களில் செல்லும் ரயில்களை விட தனியார் ரயில்கள் 15 நிமிடங்களுக்கு முன்பு முன்னதாக புறப்பட்டு செல்ல வேண்டும். இதெல்லாவற்றையும் விட எந்த தனியார் ரயிலும் 15 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகக் கூடாது என்பது தான்.
குறைந்தப்பட்சம் எத்தனை பெட்டி
தனியார் ரயில்களில் குறைந்தபட்சம் 16 பெட்டிகள் இருக்கலாம், ஆனால் அதே நேரம் அதிகபட்சமாக அதே வழித்தடத்தில் செல்லும் நீண்ட தூர பயணிகள் ரயில்களில் உள்ள எண்ணிக்கையை விட அதிகமாகவும் இருக்ககூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் இந்த தனியார் ரயிலில் பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்கள் குழுவினரும் இருப்பார்கள்.
பரமரிப்புக்கு இடம் ஒதுக்கீடு
தனியார் ரயில்களுக்கு ஏற்கனவே உள்ள யார்டு, பெட்டிகள் பராமரிப்பு செய்யும் பகுதிகளிலேயே தனியாக பராமரிப்புக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்களை இயக்கும் தனியார் நிறுவனம் சந்தை விலைக்கு ஏற்ப தங்களது கட்டணங்களை நிர்ணயம் செய்து கொள்ளலாம் எனவும் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் தனியார் ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு சலுகை வழங்கலாம்.
விளம்பரம் செய்து கொள்ளலாம்
இதெல்லாவற்றையும் விட தனியார் ரயில் நிறுவனங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப விளம்பரம் செய்து கொள்ளலமாம். அதாவது தங்களது ரயில்கள் கட்டண விவரங்களின் விளம்பரப்பலகைகளை பயணிகள் பார்க்கும் வகையில் முக்கிய இடங்களில் வைத்து கொள்ளலாமாம். அதோடு ரயில்களை குத்தகைக்கு எடுத்தும் இயக்கி கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ரயில்களை இயக்க டிரைவர் பற்றாக்குறை ஏற்பட்டால், ரயில்வே துறையில் பணிபுரியும் டிரைவர்களையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications