லண்டன் செல்ல தயாரான ராணா கபூர் மகள்.. தடுத்து நிறுத்திய ஏர்போர்ட் காவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர வைத்துக்கொண்டு இருக்கும் யெஸ் வங்கி பிரச்சனை சாமானிய மக்களை மட்டும் அல்லாமல் பெரும் நிறுவனங்களையும், பெரும் பணக்காரர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் விஜய மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்சி ஆகியோரின் கடன் மோசடி பிரச்சனை பெரியதாக வெடிக்கும் முன்னர் நாட்டை விட்டு ஓடியது போல் தற்போது யெஸ் வங்கியின் தலைவர் ரானா கபூர் மகள் ரோஷினி கபூர் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சி செய்துள்ளார்.

ரோஷினி கபூர்-இன் இந்தச் செயல் மக்கள் மத்தியில் தீயாகப் பரவி வருகிறது.

லண்டனுக்குத் தப்பிக்க முயற்சி

லண்டனுக்குத் தப்பிக்க முயற்சி

யெஸ் வங்கியின் தலைவர் ரானா கபூர்-இன் மகள் ரோஷினி கபூர் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் வாயிலாக லண்டனுக்குச் செய்ய முயற்சி செய்துள்ளார். லண்டன் பயணத்திற்காக விமான நிலையம் வரும் போதும் சோதனையில் விமான நிலைய காவல் அதிகாரிகளால் ரோஷினி கபூர் லண்டன் செல்வதைத் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

அமலாக்கத் துறை

அமலாக்கத் துறை

யெஸ் வங்கியின் கட்டுப்பாடு தற்போது முழுவதும் ரிசர்வ் வங்கியின் கீழ் இருக்கும் நிலையில் தற்போது பல்வேறு மோசடிகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதன் அடிப்படையில் தான் ரானா கபூர்-ஐ அதிகாலை 3 மணிக்கு டெல்லியில் அவரின் வீட்டில் வைத்து பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளது.

நோட்டீஸ்

நோட்டீஸ்

ரானா கபூர்-இன் கைதிற்குப் பின் முன்னெச்சரிக்கையாக அமலாக்கத் துறை யெஸ் வங்கி மோசடிகளில் அவரின் மகளுக்கும் தொடர்பு இருக்கும் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தான் ரோஷினி கபூர் லண்டன் செல்ல முயற்சி செய்த போது விமான நிலையம் காவல் அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

 

20 போலி நிறுவனங்கள்

20 போலி நிறுவனங்கள்

தற்போது கிடைத்துள்ள தவல்களின் படி யெஸ் வங்கி தலைவர் ரானா கபூர் மற்றும் அவரது குடும்பம் (மனைவி மற்றும் 3 மகள்கள்) சேர்ந்து சுமார் 20 போலி நிறுவனங்களை உருவாக்கி மிகப்பெரிய அளவிலான மோசடிகளைச் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

விசாரணை

விசாரணை

மும்பை ஏர்போர்ட் காவல் அதிகாரிகள் அமலாக்கத் துறையிடம் ரோஷினி கபூர்-ஐ ஒப்படைத்த நிலையில் தற்போது விசாரணையில் ஈடுப்பட உள்ளார்.

யெஸ் வங்கி தலைவர் ரானா கபூர்-க்கு ராக்கி கபூர் டான்டன், ரோஷினி கபூர், ராதா கபூர் என 3 மகள்கள் உள்ளனர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rana Kapoor’s London-bound daughter stopped at Mumbai International Airport

Yes Bank founder Rana Kapoor's daughter Roshini Kapoor was stopped on Sunday from leaving the country at Mumbai International Airport. She was going to London by British Airways. She was stopped at the airport as a Look Out Circular (LoC) was issued against her by the Enforcement Directorate (ED).
Story first published: Monday, March 9, 2020, 6:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X