டெல்லி: ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI) இரண்டு கூட்டுறவு வங்கிகளுக்கு 7 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இதில் வியாசாயிக் சகாரி வங்கி மரியடிட் (Vyavasayik Sahakari Bank Maryadit) கூட்டுறவு வங்கி, கேஓய்சி (KYC) மற்றும் பிற விதிமுறைகளை மீறியதற்காக 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இதே லாதூரில் உள்ள மஹாராஷ்டிரா நகரி சஹாகரி வங்கி மரியடிட் (maharashtra nagari sahakari bank maryadit) மீது 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம்
இது குறித்து ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் ராய்ப்பூரில் உள்ள வியாசாயிக் சஹாகரி வங்கி மரியடிட் மீது, கே ஒய் சி பிரச்சனை காரணமாக 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு கூட்டுறவு வங்கிக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை
எனினும் இது குறித்தான விரிவான அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில் நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் கடன் செயலிகள் (லோன் ஆப்) விவகாரம் பற்றிய எச்சரிக்கை விடுத்தது. இந்த லோன் ஆப் மூலம் கடன் வழங்கும் நபர்கள், அதிக வட்டி, பிராசஸிங் கட்டணங்கள், ஜிஎஸ்டி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் கடுமையான அபராதம் விதித்து வாடிக்கையாளர்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்துகின்றனர். எனவே, இதுபோன்ற ஆப்களிடமிருந்து விலகியிருக்கும்படி ரிசர்வ் வங்கி எச்சரித்திருந்தது.
புகார் அளிக்கலாம்
அதேசமயம் ஆன்லைன் கடன் மோசடி தொடர்பான வழக்குகளில் சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் தைரியமாக முன்வந்து https://sachet.rbi.org.in என்ற தளத்தில் புகார் அளிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருங்கள்
தெலுங்கானாவில் ஆன்லைன் கடன் செயலி மோசடி தொடர்பாக சீன நாட்டவர் உட்பட நான்கு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். நகரத்தில் உள்ள கால் சென்டரான குபேவோ டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை நடத்திய பின்னர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆக வாடிக்கையாளர்கள் கே ஓய் சி அப்டேஷன் உள்ளிட்ட பலவற்றிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அதன் மூலம் தவறு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications