கொரோனா வைரஸினால் சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தினை தூக்கி நிறுத்த, ரிசர்வ் வங்கியின் அடுத்த கூட்டத்தில், வட்டி குறைப்பு செய்யப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொருளாதாரத்தினை புதுபிக்க வேண்டிய அவசியத்தினால், வரும் ஆகஸ்ட் மாதத்தில் வரவிருக்கும் கூட்டத்தில், ரெபோ விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் ஆளூனர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான கூட்டம், அடுத்து வரும் ஆகஸ்ட் 4 முதல் ஆக்ஸ்ட் 6ம் தேதி வரையிலான மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. ஆக இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே ரிசர்வ் வங்கி பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நடக்கவிருக்கும் இந்த கூட்டத்திலும் மேற்கொண்டு எந்த மாதிரியான நடவடிக்கைகள் இருக்கும் என்றும் எண்ணப்படுகிறது. ஏனெனில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில் பொருளாதாரம் பற்றிய பார்வை மிக மோசமாக இருந்து வருகிறது.
ஆக இதற்கு முன்பு மார்ச் மற்றும் மே மாதத்தில் நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்திலேயே 115 அடிப்படை புள்ளிகள் ரெபோ விகிதம் குறைக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் எவ்வளவு குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையில் மற்றொரு அறிக்கையில் நிபுணர்கள் ரெபோ விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளையும், தலைகீழ் ரெபோ விகிதத்தில் 35 அடிப்படை புள்ளிகளையும் குறைக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று இக்ராவின் முதன்மை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் பிசினஸ் ஸ்டேண்டர்டு செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மட்டும் அல்ல, இதே போன்ற கருத்துக்களையே யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜ்கிரான் ராயும் தெரிவித்துள்ளார். ரெபோ விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொழில்துறை அமைப்பான அசோசெம் தொழில் துறை எதிர்கொள்ளும் சிக்கல்களை கருத்தில் கொண்டு, கடன் மறுசீரமைப்பில் ரிசர்வ் வங்கி அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும் கடனை மறுசீரமைப்பது பணவியல் கொள்கை குழுவின் முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் அசோசெம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications