நாட்டில் உள்ள நெருக்கடியான நிலைக்கு மத்தியில் ஒட்டுமொத்த வாராக்கடன் மதிப்பானது, நடப்பு நிதியாண்டில் 12.5 சதவீதமாக அதிகரிக்கலாம் என்றும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸினால், அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணமாக, அனைத்து சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில்சாலைகள் மற்றும் ஆலைகள் என அனைத்தும் முடங்கின. இதன் காரணமாக பெருத்த பொருளாதார நெருக்கடியான நிலையே நிலவி வருகிறது.

இதனால் நிறுவனங்கள் மற்றும் தொழில் சாலைகள் என பலவும் வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றன. இதே தனி நபர் கடன்கள் என பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் 8.5 சதவீதமாக இருந்த வாராக்கடன் விகிதமானது, நடப்ப நிதியாண்டில் 12.5 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இதே நிலவி வரும் நெருக்காடியான நிலையானது இன்னும் மோசமடையும் பட்சத்தில் வாராக்கடன் மதிப்பானது 14.7 சதவீதமாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் மதிப்பானது 11.3 சதவீதத்தில் இருந்து 15.2 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதே தனியார் வங்கிகளின் வாரக்கடன் மதிப்பானது 4.2 சதவீதத்தில் இருந்து 7.3 சதவீதமாகவும் அதிகரிக்கா வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதே வெளி நாட்டு வங்கிகளின் வாராக்கடன் மதிப்பானது 3.9 சதவீதமாகவும் அதிகரித்தும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாராக்கடன் விகிதமானது நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தி, ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை, பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் வாராக்கடன் மதிப்பானது கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கீட்டுக்காக கடந்த 201-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த ஆண்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான தரவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதோடு முந்தைய ஆண்டுகளை விட, நடப்பு நிதியாண்டில் லாப விகிதங்கள் குறைவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் கடன் தொகை திரும்ப செலுத்துவதற்கான கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால், நடப்பு நிதியாண்டில் வங்கிகளின் லாப விகிதம் குறையலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications