இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வர்த்தக விரிவாக்க பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அதிகளவில் வருமானத்தைத் தரும் தனது எண்ணெய் வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முதல் முறையாக முதலீடு செய்ய வாய்ப்புக் கொடுத்தது மொத்த வர்த்தகச் சந்தையையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தற்போது முகேஷ் அம்பானி அபுதாபி நகருக்கு அருகில் இருக்கும் ரூவைய்ஸ் என்னும் இடத்தில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
கலக்கல் கூட்டணி
இந்தியாவின் மாபெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமான Adnoc ஆகிய நிறுவனங்கள் இணைந்து Ruwais என்னும் இடத்தில் பிவிசி-யின் மூலப்பொருளான Ethylene Dichloride தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளது.
அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் என்பது ஐக்கிய அரபு நாடுகளின் அரசு நிறுவனமாகும்.
Adnoc நிறுவனம்
ரிலையன்ஸ் மற்றும் Adnoc நிறுவன கூட்டணி ஒப்பந்தம் மூலம் Ruwais பகுதியில் இருக்கும் Adnoc சுத்திகரிப்புல மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைக்கு அருகிலேயே இப்புதிய Ethylene Dichloride தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க ஆலோசனை செய்யப்பட உள்ளது. அனைத்தும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என இரு தரப்பும் தெரிவித்துள்ளது.
Adnoc, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடனான இந்தக் கூட்டணி தனது பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தை மேம்படுத்தவும் விரிவாக்கம் செய்யவும் முடியும் என நம்புகிறது.
கச்சா எண்ணெய்
இந்தியாவிற்குத் தேவையான கச்சா எண்ணெய் அளவில் 6 சதவீதம் ஐக்கிய அரபு நாடுகள் விநியோகம் செய்கிறது. இது கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு 3 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய். அதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் உடன் கூட்டணி சேர்ந்துள்ள அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமான Adnoc உலகிலேயே 12வது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.
இந்த OPEC அமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக முறை
தற்போதைய ஒப்பந்தத்தின் படி இக்கூட்டணி தொழிற்சாலைக்கு அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமான Adnoc, ethylene விநியோகம் செய்யும், இத்தொழிற்சாலையை ரிலையன்ஸ் நிர்வாகம் செய்து தயாரிப்பு பொருட்களை இந்தியச் சந்தைக்குள் கொண்டு வருவதே திட்டம். இந்த வர்த்தகத்தின் மூலம் Adnoc நிறுவனமும் இந்தியச் சந்தையில் நேரடியாக இறங்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும் Adnoc நிறுவனமும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்திட்டம் வெற்றிகரமாக நடந்தால் அடுத்தடுத்த முதலீடுகள் இந்தியாவில் குவிய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications