இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் சுமார் 14,000 கோடி ரூபாய் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் தயாராகியுள்ளது. இத்திட்டத்திற்கு உலக வங்கியும், ஏசியன் டெவலப்மென்ட் வங்கியும் நிதியுதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியை மாநில அரசுகளுக்குக் கொடுத்து மத்திய அமைச்சகத்தின் கண்காணிப்பில் சாலை போக்குவரத்து பணிகளை நாடு முழுவதும் மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது.

இத்திட்டத்தை மிகவும் கடிப்பான மேற்பார்வையில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும். சாலை பாதுகாப்பை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் விபத்துக்களை அதிகளவில் குறைக்கும் முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
2018ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சாலை விபத்தில் சுமார் 1,50,000 பேர் இறந்துள்ளனர் என அரசு தரவுகள் கூறுகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்த 14,000 கோடி ரூபாய் நிதி திட்டம் பெரிய அளவில் உதவும். ஆனால் மத்திய மாநில அரசுகள் அதிகம் விபத்து நடக்கும் இடத்தைத் தேர்வு செய்து அந்த இடத்தில் தேவையான பாதுகாப்புப் பணிகளைச் செய்தால் சரியாக இருக்கும். ஆனால் எங்கு இத்திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது எனத் தெரியவில்லை.
மேலும் மாநில அரசு இத்திட்டத்தைச் சரியான முறையிலும், நேர்மையாகவும் செய்ய வேண்டும் என்பதற்காக இத்திட்டத்திற்கான நிதியைப் பகுதி பகுதியாக விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2018ஆம் ஆண்டுச் சாலை விபத்து மற்றும் சாலை விபத்தில் ஏற்பட்ட மரணம் குறித்துச் சுமார் 199 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வில் இந்தியா தான் அதிக அளவிலான உயிர்களை இழந்துள்ளது என உலகச் சாலை புள்ளியியல் தரவுகள் கூறுகிறது.
இந்தியாவிற்கு அடுத்தபடியாகச் சீனா, அமெரிக்கா இருப்பது குறிப்பிடத்தக்கது, கிட்டத்தட்ட மொத்த சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியாவில் மட்டும் சும்ரா 11 சதவீதம் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது என 2018 WHO Global Report on Road Safety அறிக்கை கூறுகிறது.
இந்த ஆய்வுகள் மற்றும் தகவல்களின் படி தான் உலக வங்கியும், ஏசியன் டெவலப்மென்ட் வங்கியும் இந்தியாவின் சாலை பாதுகாப்பை மேம்படுத்த சுமார் 14,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications