இந்தியா முழுவதும் கொரோனாவின் தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மார்ச் 1 முதல் மூன்று மாதத்திற்கான இஎம்ஐ தள்ளி வைக்க அனுமதித்தது.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் அனுமதியின் படி, பல வங்கிகள் இதனை அமல்படுத்தியுள்ளன.
இது குறித்து பல வங்கிகள் தொடர்ந்து அறிவிப்புகளை கொடுத்து வருகின்றன. அவற்றில் சில..
எஸ்பிஐ கால அவகாசம் நீட்டிப்பு
ஆக ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு ஏற்ப எஸ்பிஐ இந்த 2 மாத இஎம்ஐக்கு கால அவகாசத்தினை நீட்டித்துள்ளது. இது மார்ச் 1, 2020 முதல் மே 31 வரையில் அமலில் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் தற்போது அதற்குண்டான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
பல பொதுதுறை வங்கிகள் அனுமதி
எஸ்பிஐ வங்கியினை தொடர்ந்து தற்போது பல பொதுத்துறை வங்கிகளும் இதற்கு அனுமதி கொடுத்துள்ளன. குறிப்பாக பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் & சிந்த் பேங்க், ஐடிபிஐ வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகளும் அதனதன் வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ அவகாசம் குறித்து தகவல் கொடுத்துள்ளன.
எஸ்பிஐயின் செயல்முறை
ஆனால் இவ்வாறு இஎம்ஐ அவகாசம் குறித்து ஒவ்வொரு விதமான செயல்முறையை பின்பற்றி வருகின்றன. இதில் நாட்டின் முதன்மை வங்கியான எஸ்பிஐ வங்கி opt-in வழியை தேர்தெடுத்துள்ளது. இதன் படி வாடிக்கையாளார்கள் தங்களது விருப்பத்தினை வங்கிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
ஐடிபிஐ வங்கியின் செயல்முறை
இதே ஐடிபிஐ வங்கி 'opt-out' என்ற திட்டத்தினை தேர்ந்தெடுத்துள்ளது. ஆக எந்த வாடிக்கையாளர்கள் இஎம்ஐ அவகாசம் வேண்டாம் என யார் நினைக்கிறார்களோ அவர்கள், ஏப்ரல் 3க்குள் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. அதாவது இந்த சேவையில் விருப்பம் இல்லாதவர் [email protected] என்ற மெயில் ஐடிக்கு மெயில் அனுப்ப தெரிவித்துள்ளது.
கனரா வங்கியின் செயல்முறை
கனரா வங்கி இந்த இஎம்ஐ அவகாசத்தினை தள்ளி வைக்க 8422004008 என்ற எண்ணுக்கு NO என்று எஸ் எம் எஸ் அனுப்புமாறு கேட்டுள்ளது. அப்படி இல்லை எனில் [email protected]. என்ற மெயில் ஐடிக்கு விவரங்களை அனுப்பலாம் எனவும் தெரிவித்துள்ளது.
பாதிப்பு எதுவும் இருக்காது
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி, தற்காலிக தடை பெறுபவர்களின் கடன் மதிப்பில் (கிரெடிட் ஸ்கோரில்) எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு முறையை பின்பற்றுவதால், இந்த வசதியை பெற விரும்பாதவர்கள் அந்தந்த வங்கிகளுடன் தெளிவுக்காக இணைய வேண்டும். இதற்காக உங்கள் வங்கியின் இணையத்திலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ நீங்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications