கேரள மக்கள் கொண்டாடும் பாரம்பரிய முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம். ஓணம் என்றாலே கலர் கலரான கோலங்களும், அந்த விழாவில் போடப்படும் புலியாட்டமும் மிக பிரபலம்.
இந்த ஓணம் திருவிழாவானது அசுரர்களிலேயே மக்கள் மிகவும் நேசிக்கக்கூடிய வளமாக, திறமையான ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, ஒவ்வொரு ஆண்டும் மக்களை வந்து பார்த்து வளமோடு, செழிப்பாக வாழ்கிறார்களா என பார்த்து செல்வதாக கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வு தான் ஓணம் பண்டிகை.
இது மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளாகவும், கேரள புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகின்றது.
பாரம்பரிய விழா
10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த விழாவில், பெண்கள் பாரம்பரிய உடையணிந்து, பிரம்மாண்ட பூக்கோலம் இடுவதே தனி அழகு தான். இது ஒரு புறம் எனில் மறுபுறம் மகாபலி மன்னனை வரவேற்று பாடும் கைகொட்டுகளி நடத்தின் பெண்கள் இணைந்து ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
எஸ்பிஐ ஊழியர் அசத்தல்
இப்படிப்பட்ட ஒரு பாரம்பரிய திருவிழா வரவிருக்கும் 8ம் தேதி கேரளாவில் கொண்டாடப்படவுள்ளது. இதற்கிடையில் கேரளாவே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஓணம் விழா களைகட்டத் தொடங்கியுள்ளது.
இந்த விழாவினை முன்னிட்டு எஸ்பிஐ ஊழியர் ஒருவர் தனது சந்தோஷத்தினை வெளிப்படுத்தும் விதமாக மகாபலி அரசர் போல வேடமிட்டு, வங்கிக்கு வந்துள்ளது சமூக வலைதளங்களில் பல ஆயிரம் பேரினை ஈர்த்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கும் மகாபலி
மகாபலி அரசர் போல வேடமிட்டு வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகின்றது. எஸ்பிஐயில் நடந்த இந்த சம்பவமானது கேரளாவின் தலச்சேரியில் நடந்துள்ளதாக தெரிகிறது.
விமர்சனம்
நிக்சான் ஜோசப் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் இதனை காண முடிகிறது. இது குறித்து பலரும் இணைத்தில் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஊழியரின் ஆற்றலை பாராட்டி வருகின்றனர்.
எனினும் இந்த ஊழியரின் ஆடை குறியீட்டினை ஓய்வுபெற்ற எஸ்பிஐ சிஜிஎம் அதிகாரி. எஸ்பிஐ ஒரு டிரஸ் கோடினை கொண்டுள்ளது. இதனை அனுமதித்தால் கிளைகளில் வங்கி சேவையினை விட, அதிகமான திரையரங்கு சேவை இருக்கலாமென விமர்சனம் செய்துள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications