பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவு விரைவில் நனவாகும் விதமாக, ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நெஃப்ட் எனப்படும் நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்பர் (NEFT) மூலமாக 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக பணி நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே நெஃப்ட் மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி, வருடத்தில் 365 நாட்களும் நெஃப்ட் சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம் என எஸ்பிஐ டிசம்பர் 16 முதல் அமலுக்கு கொண்டு வந்தது.

அதிலும் நெஃப்ட் சேவை அனைத்து நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் முடிவு என இல்லாமல் நமக்கு ஏற்றாற்போல் விருப்பம் போல பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.
நெஃப்ட் பரிமாற்றத்திற்கு எஸ்பிஐ எந்த கட்டணமும் வசூல் செய்யவில்லை. இந்த நெஃப்ட் சேவையில் குறைந்த பட்ச பண பரிவர்த்தனை வரம்பு என்று எதுவும் இல்லை. இதே சில்லறை வாடிக்கையாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையில் நெஃப்ட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
நெஃப்ட் வசதி தற்போது 24 மணி நேரமும் செய்து கொள்ள முடியும். இதை விடுமுறை நாட்களில் கூட செய்து கொள்ள முடியும். இதற்கு முன்பாக வங்கி விடுமுறை தினங்களில் இந்த வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி பணம் பரிமாற்றம் செய்வது:
எஸ்பிஐ இணைய வங்கி சேவையை பயன்படுத்தும் லாகின் பக்கத்தினை கிளிக் செய்து பார்க்கும் போது, அங்கு இரண்டு ஆப்சன்கள் உள்ளன. ஒன்று வித்-இன் எஸ்பிஐ, இரண்டாவது அவுட்சைடு எஸ்பிஐ.
இதில் அவுட்சைடு எஸ்பிஐ ஆப்சனில் எஸ்பிஐ தவிர மற்ற வங்கிகளுக்கு டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம். இதில் பெனிபிசியரி ஆப்சனில் எப்போதும் போல பெயர் மற்றும் வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர் என அனைத்து விவரங்களையும் கொடுத்து பூர்த்தி செய்து கொள்ளலாம்.
இதே பணத்தை அனுப்ப மூன்று ஆப்ஷன்கள் உள்ளன. ஒன்று பே நவ், செட்யூல்டு லேட்டர், ஸ்டேண்டிங் இன்ஸ்ட்ரக்சர் என உள்ளன. இதில் தேவையானவற்றை கிளிக் செய்து சப்மிட் கொடுக்க வேண்டும். இதில் சப்மிட் கொடுக்கும் முன் உங்களது விவரங்கள் சரியா என ஒரு முறைக்கு இரு முறை பார்த்து பின் கன்பார்ம் செய்ய வேண்டும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications