கொரோனா வைரஸ் பாதித்த நாடுகள் பட்டியலில் சிங்கப்பூரும் ஒன்று. யாரைத் தான் விட்டு வைத்தது கொரோனா?
சிங்கப்பூரில் மட்டும் சுமார் 9,125 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று பரவி இருப்பதாக, அந்நாட்டு நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகமே சொல்கிறது.
இந்த கொரோன பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் பிரதமர் லீ சிங் லாங் (Lee Hsien Loong), இன்று தளர்த்தப்பட்ட லாக் டவுனை (Partial Lockdown) வரும் ஜூன் 01, 2020 வரை நீட்டித்து இருக்கிறார்.
circuit breaker
இந்த நடவடிக்கைகளை சிங்கப்பூரின் பிதமர் லீ சின் லாங், சர்க்யூட் பிரேக்கர் என்று அழைக்கிறார். இந்த நடவடிக்கையில் பள்ளிகளை மூடுவது, பெரும்பாலான அலுவலக பணி இடங்களை தற்காலிகமாக மூடுவது போன்றவைகளும் அடக்கமாம். அப்படி என்றால் உலகத்தின் வர்த்தக நகரமாக இருக்கும் சிங்கப்பூரே ஜூன் மாதம் வரை முடங்கித் தான் இருக்கும்.
லாக் டவுன்
2 வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட லாக் டவுன் நடவடிக்கைகள் எல்லாம், வரும் மே 04, 2020 உடன் முடிவுக்கு வர வேண்டும். ஆனால் இப்போது, கொரோனா வைரஸ் மேற்கொண்டு அதிகம் பரவக் கூடாது என்கிற நோக்கில், வரும் ஜூன் 01, 2020 வரை நீட்டித்து இருக்கிறது சிங்கப்பூர் அரசு.
தளர்வான லாக் டவுன்
இந்த partial lockdown காலத்தில் சிங்கப்பூரில் இருக்கும் பிசினஸ்கள், தங்களை சமாளித்துக் கொள்ள, சில உதவித் திட்டங்களை, மே மாதம் வரை நீட்டிக்க இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறது சிங்கப்பூர் அரசு. இதில் கூலி மானியம் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி கட்டணங்களில் தள்ளுபடி (Rebates in foreign worker levies) போன்றாவைகளும் அடக்கமாம்.
புதிய நோயாளிகள்
சிங்கப்பூரில் புதிதாக கொரோனா தொற்று வரும், பெரும்பாலான நோயாளிகள், டார்மிட்டரிகளில் வாழும் புலம் பெயர்ந்து வந்து வேலை பார்ப்பவர்களுக்கு தான் அதிகமாக இருப்பதாகவும் சிங்கப்பூர் அரசு சொல்லி இருக்கிறது. சிங்கப்பூர் நாட்டில் கட்டுமான வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களைத் தான் அதிகம் நம்பி இருக்கிறது.
இரண்டாவது நாள்
சிங்கப்பூர் நாட்டில், தொடர்ந்து 1,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அறிவிப்பது இன்று இரண்டாவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தென் கிழக்கு ஆசியாவிலேயே அதிகமாக கொரோனா இருக்கும் நாடுகளில் தற்போது சிங்கப்பூர் முன்னிலை வகிக்கத் தொடங்கி இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications