டெல்லி : நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகர நஷ்டம் 462.6 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதிகளவு செலவினங்களால் தான் இந்த நஷ்டம் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை தரையிறக்குவது மற்றும் கணக்கியல் விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் நஷ்டத்திற்கு வழிவகுத்துள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவே கடந்த ஜூன் காலாண்டில் குறைந்த செலவினங்களால் 261.7 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்துள்ளதாகவும் இந்த நிறுவனம் பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குர்கானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், செப்டம்பர் காலாண்டில் அதன் நிகர நஷ்டம் 389.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, மும்பை பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நஷ்டத்தையே கண்டிருந்தாலும், இந்த நிறுவனத்தின் வருவாய் 2,845.3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 1,874,.8 கோடி ரூபாயாக மட்டுமே இருந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் தனது சேவையில் புதிய இடங்களை சேர்த்ததுடன், பயணிகள் மற்றும் சரக்குக் விமானங்களையும் விரிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் செலவினங்கள் மிக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் காலாண்டில் 3,537.48 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 2,286.65 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது எரிபொருள் விலையேற்றம், விமான நிலைய கட்டணங்கள் அதிகரிப்பு என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக எரிபொருள் செலவினமானது 37.51 சதவிகிதம் அதிகரித்து, 1,162.09 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இதே விமான நிலைய குத்தகை கட்டணம் 63 சதவிகிதம் அதிகரித்து, 292.44 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே போல் விமான பராமரிப்பு செலவும் 43.92 சதவிகிதம் அதிகரித்து 292.44 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது குறித்து ஸ்பெஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் கூறுகையில், கடந்த சில மாதங்களாகவே தொழில் துறையின் வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதால், இதன் தாக்கம் தெளிவாக தெரிகிறது. எனினும் விமான துறை இழந்த வேகத்தை விரைவில் மீண்டும் பெறும் என்று நாங்கள் பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை தற்போது கிட்டதட்ட 6 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 107 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications