வரலாறு காணாத மோசமான பொருளாதாரச் சரிவுக்கு மத்தியில் பொது மக்கள் போராட்டம் மற்றும் அரசியல் நெருக்கடி ஆகியவை இலங்கையை மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இந்தப் பெரும் சரிவில் இருந்து எப்படி மீண்டு வருவது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கும் இலங்கைக்கு உலக வங்கியின் 160 மில்லியன் டாலர் கடன் பெரும் உதவியாக இருந்தாலும். தற்போது இலங்கை முதல் தடவையாகத் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டது.
Recommended Video
இலங்கை மத்திய வங்கி
இன்று இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் நந்தலால் வீரசிங்க கூறுகையில் நாட்டின் மொத்த கடன் அளவை மறுசீரமைக்கும் வரையில் இலங்கை அரசால் கடனுக்கான எந்தப் பேமெண்ட்-ஐயும் செலுத்தி முடியாது என்று கொள்கை வகுப்பாளர்கள் இலங்கைக்குக் கடன் கொடுத்தவர்களிடம் தெரிவித்துள்ளனர் என நந்தலால் வீரசிங்க முக்கிய அரசு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
78 மில்லியன் டாலர்
இதன் மூலம் முதல் முறையாக இலங்கை அரசு ஏப்ரல் 18 ஆம் தேதி கடனாளர்களுக்குச் செலுத்த வேண்டி 78 மில்லியன் டாலர் மதிப்புடைய கூப்பன்களை அளிக்க 30 நாட்கள் அவகாசம் முடிந்த நிலையிலும் செலுத்தவில்லை. இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக இலங்கை திவாலாகியுள்ளது என அறியப்படுகிறது.
40 சதவீத பணவீக்கம்
இலங்கையில் ஏற்கனவே பணவீக்கம் 30 சதவீதமாக இருக்கும் நிலையில் வரவிருக்கும் மாதங்களில் இது 40 சதவீதமாக ஆக அதிகரிக்கும் என நந்தலால் வீரசிங்க கூறுகிறார். தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் இலங்கை நாணயம் மற்றும் பொருளாதார நெருக்கடி இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
உணவு மற்றும் எரிபொருள்
உணவு மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான அன்னிய செலாவணி இருப்பு கூட இல்லாமல் உள்ளது இலங்கை. இந்தச் சூழ்நிலையில் 40 சதவீத பணவீக்கம், திவாலான நிலை ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
1948க்குப் பின்
ஜனவரி முதல் வெளிநாட்டில் இருந்து இலங்கை வாங்கிய அத்தியாவசிய பொருட்களின் நிலுவைத் தொகை அதிகரித்துள்ளது. மேலும் இலங்கை அரசு சுமார் 12.6 பில்லியன் டாலர் தொகைக்கான பேமெண்ட்-ஐ நிறுத்தி வைத்துள்ளது. 1948 இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை முதல் முறையாக வாங்கிய கடனுக்குத் திருப்பி செலுத்த முடியாமல் திவாலாகியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications