மஞ்சள் மாநகரம் என்று பெருமையாக அழைக்கப்படும் ஈரோட்டிற்கு, மேலும் பெருமை சேர்க்கும் வகையில் வேளாண் பட்ஜெட்டில் ஒரு சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது.
அது மஞ்சள் மாநகரை பெருமைபடுத்தும் விதமாக ஈரோட்டில் 100 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மஞ்சள் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
எங்கு அமையப்போகிறது?
எனினும் இந்த திட்டம் எங்கு அமல்படுத்தப்படும், என்ற முழுமையான விவரங்கள் வெளியிடப்படவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோட்டில் மஞ்சள் சந்தைக்கு, ஈரோடு மட்டும் அல்ல, மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது.
உற்பத்தியினை அதிகரிக்கலாம்
இந்த ஆராய்ச்சி மையம் அமைந்தால் அவற்றின் உற்பத்தி திறனை அதிகரிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம், பல சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்படலாம். இதன் மூலம் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, மனித ஆற்றலையும் பயன்படுத்தி முறையான பயிற்சியும் அளிக்கப்படும். இதன் மூலம் உற்பத்தியினை அதிகரிக்க முடியும்.
மேம்படுத்தப்பட்ட ரகங்கள்
மஞ்சள் பற்றிய அறிவியல் பூர்வமான தகவல்களின் களஞ்சியமாக இந்த ஆராய்ச்சி மையம் மாறலாம். இந்த ஆராய்ச்சி மையங்கள் பழங்கால மற்றும் உயர் தொழில்நுட்ப முறைகளிலிருந்து மேம்படுத்தப்பட்ட ரகங்களை உருவாக்கி வேறுபாடுகளையும் கண்டறிந்து பராமரிக்கப்படும். இதன் மூலம் பழமை மாறாமல் பாரம்பரிய மஞ்சள் உற்பத்தியினை அதிகரிக்க முடியும்
ஈரோட்டில் இருந்து ஏற்றுமதி
மஞ்சள் பற்றிய மகிமையை நாம் அறிந்திருக்கலாம். உலக அளவில் மஞ்சள் உற்பத்தியில் 91% இந்தியாவில் தான் விளைகிறது. இதில் சுமார் 30% அதிகமாக மஞ்சள் ஈரோடு மாவட்டத்தில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக சந்தையில் ஈரோடு மஞ்சளுக்கு தனி மவுசு உண்டு எனலாம். ஈரோடு மஞ்சள் புவிசார் குறியீடும் பெற்றுள்ளது.
ஈரோட்டில் அதிகளவில் பயிரிடப்படும் விரலி மஞ்சள்
ஈரோட்டின் பெருமையாக போற்றப்படும் மஞ்சள், இன்னும் வரும் காலத்தில் மேம்படுத்தப்படலாம். தமிழகத்தில் சுமார் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சுமார் 30% ஈரோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக பெண்கள் அதிகம் பயன்படுத்தும் விரலிமஞ்சள் இப்பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகின்றது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications