தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில், சாம்சங் நிறுவனத்துடன் 1588 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி திட்டத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இது குறித்தான புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கையெழுத்தாகியுள்ளது.
இந்த திட்டமானது சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமைய உள்ளதாகவும் இதன் மதிப்பு, 1588 கோடி ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம் வளர்ச்சி அடையும்
ஸ்ரீ பெரும்புதூரில் அமையவுள்ள இந்த திட்டத்தில் காற்றழுத்த கருவிகள் உற்பத்தி திட்டத்தினை சாம்சங் நிறுவனம் தொடங்கவுள்ளது. சாம்சங்கின் இந்த உற்பத்தி திட்டத்தினால் 600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது. சர்வதேச அளவில் சந்தை மதிப்பில் டாப் 10 நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் சாம்சங்கின், இந்த முதலீட்டினால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும் மேன்மை அடையும்.
வேலை வாய்ப்பும் பெருகும்
இதன் மூலம் பலருக்கும் வேலை வாய்ப்பும் பெருகும். ஏற்கனவே சாம்சங் நிறுவனங்கள் தமிழகத்தில் அதன் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆலையை வைத்துள்ள நிலையில், மேற்கொண்டு அதன் முதலீடுகள் அதிகரித்து வருவது, இன்னும் வேலை வாய்ப்புகளை கொடுக்கும். வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அதேபோல எதிர்காலத்திலும் இந்த முதலீடானது தொடரலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
கலைஞர் காலத்திலேயே சாம்சங்கின் ஒப்பந்தம்
முன்னதாக சாங்சங் நிறுவனம் 450 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி செய்யும் திட்டத்தினை அமைத்திட, 2006ம் ஆண்டு கலைஞர் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் அந்த ஆலையானது ஒரே ஆண்டிலேயே கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கும் வந்தது.
பிரம்மாண்ட விரிவாக்க திட்டம்
இந்த நிலையில் தற்போது 1800 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இந்த விரிவாக்க திட்டம், 2022ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் நிறைவு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2022ம் ஆண்டின் இறுதிக்குள் 80 லட்சம் அளவுக்கு கருவிகள் உற்பத்தி மேற்கொள்ளவும், 2024ம் ஆண்டின் இறுதிக்குள் 144 லட்சம் அளவுக்கும் உயர்த்த திட்டடமிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications