இந்தியாவில் மிக சமீபத்தில் ஒன்றாக இருந்த மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட கதையை நாம் அறிவோம்.
ஆந்திரப் பிரதேசம் என்று இருந்த மாநிலம், தற்போது தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.
அப்படி ஆந்திரப் பிரதேசம் இரண்டாக பிரிக்கப்பட்ட போது, ஹைதராபாத் தெலுங்கானாவுக்குப் போய்விட்டது. இப்போது தெலுங்கானா மக்களின் வாழ்கையை வளமாக்கவும், ஹைதராபாத் நகரத்தின் கட்டமைப்பு மீது இருக்கும் அழுத்தத்தைக் குறைக்கவும், தெலுங்கானா சில திட்டங்களைக் கொண்டு வந்து இருக்கிறார்கள்.
கேபினெட் கூட்டம்
கடந்த 05 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை அன்று, சுமார் 8.30 மணி நேரம் தெலங்கானா கேபினெட், இந்த ஊக்கத் தொகைகளைக் குறித்து விவாதித்து இருக்கிறார்களாம். அதோடு மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் கொடுக்கும் ஊக்கத் தொகைகளைக் குறித்தும் விவாடித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
வேலை வாய்ப்புகள் சலுகை 1
தெலங்கானா மாநில அரசு, ஒரு நிறுவனம், தங்களின் திறன் தேவை இல்லாத பணியாளர்கள் எண்ணிக்கையில் (unskilled workforce)-ல் 70 சதவிகிதத்துக்கு மேல் உள்ளூரில் இருந்து ஊழியர்களை வேலைக்கு எடுத்தால், அவர்களுக்கு தனியாக ஊக்கத் தொகைகளை வழங்கப் போகிறார்களாம். அதே போல நிறுவனங்கள், தங்களின் திறன் தேவைப்படும் (Skilled Labour) மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில், 50 சதவிகிதம் உள்ளூர் மக்களை எடுத்தாலும் தனியாக ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்து இருக்கிறார்களாம்.
சலுகை 2 வேலை வாய்ப்புகள்
அதே போல திறன் தேவை இல்லாத பணியாளர்கள் எண்ணிக்கையில் (unskilled workforce)-ல் 80 சதவிகிதத்துக்கு மேல் உள்ளூரில் இருந்து ஊழியர்களை வேலைக்கு எடுக்கிறார்களோ, அவர்களுக்கு தனி ஊக்கத் தொகைகளை வழங்குவார்களாம். அதே போல நிறுவனங்கள், தங்களின் திறன் தேவைப்படும் (Skilled Labour) மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில், 60 சதவிகிதம் உள்ளூர் மக்களை எடுத்தாலும் தனியாக ஊக்கத் தொகை வழங்கப் போகிறார்களாம்.
ஊக்கத் தொகை & சலுகைகள்
தெலங்கானா அரசின் கொள்கைகள் வழியாக பல்வேறு சலுகைகளை வழங்கும் அதே நேரத்தில், சரக்கு மற்றும் சேவை வரியில் சில சலுகைகள், ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குவதில் மானியம், மின்சார கட்டணம் போன்றவைகள் வழியாகவும் பல்வேறு சலுகைகள் மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்க இருக்கிறார்களாம்.
GRID பாலிசி
தெலங்கானா மாநிலத்தின் ஐடி துறையின் ஏற்றுமதி வியாபாரம் 1.2 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு இருக்கிறது. இந்த வியாபாரத்துக்கு ஹைதராபாத் நகரத்தின் மேற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் அமைந்து இருக்கும் நிறுவனங்கள் அதிகம் பங்களிக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா ஐடி கம்பெனிகளூம் மாதாபூர் & கச்சிபோலி ஏரியாவிலேயே அமைந்து இருக்கின்றனவாம்.
கட்டமைப்பு சவால்
இப்படி பெரும்பாலான கம்பெனிகள், ஒரே பகுதியில் அமைந்து இருப்பதால், சாலை போக்குவரத்து, மின்சாரம் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளின் மீது அதிக அழுத்தம் ஏற்படுகிறதாம். இதை மாற்ற GRID பாலிசியைக் கொண்டு வந்திருக்கிறது தெலங்கானா. இந்த கொள்கைப்படி, பரவலாக, ஹைதராபாத்தின் மற்ற பகுதிகளில் ஐடி கம்பெனிகளை நிறுவினால் ஊக்கத் தொகை கொடுக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications