இந்திய வேலைவாய்ப்பு சந்தை கடந்த சில மாதங்களாக அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் அதிகப்படியான கடன் சுமை, வர்த்தகப் பாதிப்புகள் நிறைந்த டெலிகாம் துறையில் திடீரென அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ஊழியர்கள் அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் டெலிகாம் துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 2 மடங்கு வளர்ச்சி அடையும் என வெளியாகியுள்ளது நம்பிக்கையை அளித்துள்ளது.
டெலிகாம் துறை
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ள நிலையிலும், டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகம் செய்யவும் தயாராகி வரும் நிலையில் டெலிகாம் துறை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
38000 ஊழியர்கள்
இதன் மூலம் டெலிகாம் துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை நடப்பு நிதியாண்டில் (2023) இரண்டு மடங்கு அதிகரித்து 38000 ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் டெலிகாம் சேவை துறை சார்ந்த திறன் கொண்டவர்களுக்குத் தற்போது அதிகளவிலான டிமாண்ட் இருப்பதாக HR மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
முக்கியப் பணிகள்
தற்போது நெட்வொர்க் இன்ஜினியரிங், நெட்வொர்க் ஆப்ரேஷன்ஸ், டேட்டா அனலிட்டிக்ஸ், ஆட்டோமேஷன் பிரிவை சார்ந்த ஊழியர்களுக்குத் தற்போது அதிகப்படியான டிமாண்ட் இருப்பதாகத் தெரிகிறது. மேலும் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தற்போது டிஜிட்டல் சேவைகளை வழங்குவதில் ஆர்வமாக இருக்கிறது.
முக்கியத் தொழில்நுட்பங்கள்
இதனால் செயற்கை நுண்ணறிவு, IoT, 5ஜி, டேட்டா அனலிட்டிக்ஸ், எட்ஜ் கம்பியூட்டிங், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், கிளவுட், சைபர் செக்யூரிட்டி போன்ற துறையிலும் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் இத்துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் தற்போது டெலிகாம் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.
டெலிகாம் துறை வேலைவாய்ப்பு
இந்திய டெலிகாம் துறை 2020ஆம் நிதியாண்டில் புதிய ஊழியர்களைச் சேர்க்கும் விகிதம் 13 சதவீதமாக இருந்த நிலையில், 2021ல் 1 சதவீதம் சரிந்தது. இதைத் தொடர்ந்து 2022ஆம் நிதியாண்டில் 29 சதவீதமாக உள்ளது. இதன் மூலம் டெலிகாம் ஊழியர்கள் எண்ணிக்கை 38000 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications