டெல்லி: வரவிருக்கும் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்ற நிலையில், இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் யோசனை கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய பட்ஜெட் 130 கோடி இந்தியர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதுடன், இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதை வகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆகவே இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கு மக்கள் உங்களது கருத்துகளையும், யோசனைகளையும் https://www.mygov.in என்ற தளத்தில் பதிவு செய்யலாம் என்றும் @mygovindia ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
ஆக பொதுமக்கள் 2020 - 21ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தாங்கள் பட்ஜெட் குறித்தான தங்களது கருத்துகளை அந்த தளத்தில் பதிவிடலாம். நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 சதவிகிதமாகக் குறையும் என மத்திய புள்ளியியல் அறிக்கை தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடி இத்தகைய அறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு பகிருங்கள்
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையும், போர்ப் பதற்றமும் இந்தியப் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் 2020 - 21ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கருத்துகளை தெரிவிப்பதற்கான இணையதளத்தையும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பட்ஜெட் குறித்தான ஆலோசனை
இந்த பட்ஜெட் குறித்தான ஆலோசனைக்காக முன்னதாக பல முன்னணி தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் நாட்டில் நிலவி வரும் பொருளாதார நிலையும், அதிலும் தொழில் துறையில் மந்த நிலையை போக்கவும் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் அடுத்து வரவிருக்கும் தசாப்தம் தொழில்துறையினருக்கானதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை
வரவிருக்கும் பட்ஜெட் குறித்தான ஆலோசனையில் முன்னதாக தொழிலதிபர் என பலருடன் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், இன்று முக்கிய பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலையால், நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடித்தட்டு மக்களுக்கு ஏற்ப மாற்றங்கள் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications