நாட்டின் மிகப்பெரிய புரோக்கிங் நிறுவனமான ஜெரோதாவின் 1100 ஊழியர்களில், 90% ஊழியர்கள் வரை நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணி புரிய அனுமதிக்கப்படுவார்கள் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான நிதின் காமத் தெரிவித்துள்ளார்.
ஜெரோதாவின் இந்த அறிவிப்பினால் கிட்டத்தட்ட 950 பேர் நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணிபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவின் வருகைக்கு பின்
இது குறித்து நிதின் காமத் மணி கண்ட்ரோலுக்கு அளித்த பேட்டியில், முக்கிய டீம்கள் ஹைபிரிட் மாடலில் பணிபுரியும் என்றும் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், ஊழியர்கள் பணிபுரியும் கலாச்சாரம் என்பது பெரியளவில் மாற்றம் கண்டுள்ளது. ஆரம்ப காலத்தில் வீட்டில் இருந்து பணிபுரிய கஷ்டப்பட்ட ஊழியர்கள் கூட, தற்போது நிரந்தமாக வீட்டில் இருந்தே பணி புரிந்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகின்றனர்.
செயற்கை கோள் அலுவலகங்கள்
ஜெரோதா ஊழியர்களும் பெருந்தொற்று காலத்தில் வீட்டில் இருந்தே தங்களது செயல்பாடுகளை தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து பணிபுரியும் அதன் ஊழியர்களுக்காக, கர்நாடகாவின் சிறு நகரங்களில் செயற்கைகோள் அலுவலகங்களை அமைக்க தொடங்கியுள்ளதாகவும் முன்னதாக கூறியிருந்தார்.
சுதந்திரமாக பணி
எங்கள் ஊழியர்கள் 85 - 90% பேர் வீட்டில் இருந்தே பணிபுரிகிறோம். நாங்கள் தொடர்ந்து பணி புரிவோம். கர்நாடகாவின் பெலாகவியில் அலுவலகத்தை அமைத்துள்ளோம். பெலகாவிற்கு அற்புதமான திறமை உண்டு. அங்கு பல ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதன் மூலம் பெண் ஊழியர்கள் உள்பட பலரும் சுதந்திரமாக பணிபுரிகின்றனர்.
இந்தியாவின் சிறந்த யூனிகார்ன்
ஜெரோதா இந்தியாவின் மதிப்பு மிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்று. வெளி நிதி திரட்டாத இந்திய யூனிகார்ன் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இது கடந்த ஆகஸ்ட் 2010ல் தொடங்கப்பட்டது. இன்று இந்தியாவின் முன்னணி புரோக்கிங் நிறுவனமாகும். இங்கு 9 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது நாட்டின் மொத்த சில்லறை வர்த்தக அளவுகளில் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
எது எப்படியோ மொத்தத்தில் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணிபுரிவது என்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications