நாட்டின் மிகப்பெரிய புரோக்கிங் நிறுவனமான ஜெரோதாவின் 1100 ஊழியர்களில், 90% ஊழியர்கள் வரை நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணி புரிய அனுமதிக்கப்படுவார்கள் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான நிதின் காமத் தெரிவித்துள்ளார்.
ஜெரோதாவின் இந்த அறிவிப்பினால் கிட்டத்தட்ட 950 பேர் நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணிபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவின் வருகைக்கு பின்
இது குறித்து நிதின் காமத் மணி கண்ட்ரோலுக்கு அளித்த பேட்டியில், முக்கிய டீம்கள் ஹைபிரிட் மாடலில் பணிபுரியும் என்றும் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், ஊழியர்கள் பணிபுரியும் கலாச்சாரம் என்பது பெரியளவில் மாற்றம் கண்டுள்ளது. ஆரம்ப காலத்தில் வீட்டில் இருந்து பணிபுரிய கஷ்டப்பட்ட ஊழியர்கள் கூட, தற்போது நிரந்தமாக வீட்டில் இருந்தே பணி புரிந்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகின்றனர்.
செயற்கை கோள் அலுவலகங்கள்
ஜெரோதா ஊழியர்களும் பெருந்தொற்று காலத்தில் வீட்டில் இருந்தே தங்களது செயல்பாடுகளை தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து பணிபுரியும் அதன் ஊழியர்களுக்காக, கர்நாடகாவின் சிறு நகரங்களில் செயற்கைகோள் அலுவலகங்களை அமைக்க தொடங்கியுள்ளதாகவும் முன்னதாக கூறியிருந்தார்.
சுதந்திரமாக பணி
எங்கள் ஊழியர்கள் 85 - 90% பேர் வீட்டில் இருந்தே பணிபுரிகிறோம். நாங்கள் தொடர்ந்து பணி புரிவோம். கர்நாடகாவின் பெலாகவியில் அலுவலகத்தை அமைத்துள்ளோம். பெலகாவிற்கு அற்புதமான திறமை உண்டு. அங்கு பல ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதன் மூலம் பெண் ஊழியர்கள் உள்பட பலரும் சுதந்திரமாக பணிபுரிகின்றனர்.
இந்தியாவின் சிறந்த யூனிகார்ன்
ஜெரோதா இந்தியாவின் மதிப்பு மிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்று. வெளி நிதி திரட்டாத இந்திய யூனிகார்ன் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இது கடந்த ஆகஸ்ட் 2010ல் தொடங்கப்பட்டது. இன்று இந்தியாவின் முன்னணி புரோக்கிங் நிறுவனமாகும். இங்கு 9 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது நாட்டின் மொத்த சில்லறை வர்த்தக அளவுகளில் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
எது எப்படியோ மொத்தத்தில் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணிபுரிவது என்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications