கடந்த டிசம்பர் 2018-ல், சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகச் சொல்லி வெளியேறினார் உஜித் படேல். அவர் வெளியேறும் போது அவருக்கும் மத்திய அரசுக்கும் அத்தனை நல்ல உறவு இல்லை.

ஆனால் இப்போது மீண்டும் டெல்லியில் இருக்கும் National Institute of Public Finance and Policy (NIPFP) அமைப்புக்குத் தலைவராக, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
உர்ஜித் படேலின் பதவி காலம் வரும் 22 ஜூன் 2020 முதல் தொடங்குகிறதாம். உர்ஜித் படேலை வரவேற்று National Institute of Public Finance and Policy (NIPFP) அமைப்பு ஒரு ஸ்டேட்மெண்ட்டையும் வெளியிட்டு இருக்கிறது.
NIPFP அமைப்பின் தற்போதைய தலைவர் விஜய் கேல்கர் தலைமையில் அடுத்து யாரை தலைவராகக் கொண்டு வரலாம் என விவாதித்த போது, உர்ஜித் படேலின் பெயர் தேர்வு செய்யப்பட்டதாம்.
இந்த NIPFP அமைப்பின் தலைவர் பதவி, ஒரு ஆலோசகர் பதவி போலத் தான். இந்த அமைப்பின் தலைவர், இந்த அமைப்பின் செயல்பாடுகளில் அதிகம் தலையிடமாட்டாராம். தலைவர் பதவிக்கு வருபவர்கள், அரசு அதிகாரிகளுடன் ஆண்டுக்கு 3 - 4 முறை கூட்டங்களை நடத்துவார்கள்.
இந்த கூட்டங்களில் நிதி அமைச்சகத்தில் இருந்து 3 பேர், நிதி ஆயோக் அமைப்பில் இருந்து ஒருவர், மத்திய ரிசர்வ் பேங்கில் இருந்து ஒருவர், எந்த மாநிலத்தில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறதோ அந்த மாநிலத்தின் சார்பாக மூன்று பேர் கலந்து கொள்வார்களாம்.
அவர்கள் போக முக்கியமான பொருளாதார நிபுணர்கள், ஆராய்ச்சி மையங்கள் சார்பாக மூன்று பேர், நிகழ்ச்சிக்கு பணம் கொடுக்கும் ஸ்பான்சர்கள் மற்றும் அழைப்புவிடுப்பவர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்களாம்.
இந்த National Institute of Public Finance and Policy (NIPFP) அமைப்பு பெரிய அளவில் அரசின் நிதியில் தான் இயங்குகிறதாம். பொதுவாக இந்த அமைப்பின் தலைவர் தான், தனக்குப் பின் யார் தன் பதவிக்கு வர வேண்டும் என தீர்மானிப்பாராம். அதை அமைப்பின் குழுவில் இருப்பவர்கள் பெரிய அளவில் மறுக்காமல் ஏற்றுக் கொள்வார்களாம்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications