நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே விமான நிறுவனங்களுக்கு சற்று பின்னடைவு தான். இந்த பின்னடைவை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக கொரோனாவும் தொடர்ந்து வந்தது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக லாக்டவுனும் நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது.
தற்போது லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்தாலும், பெரும்பாலான விமானங்கள் இயக்க தடையே நீடித்து வருகிறது. குறிப்பாக அண்டை நாடுகளுக்கு செல்லும் விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
பின்னடைவை சந்தித்த நிறுவனங்கள்
இதற்கிடையில் தான் விமான நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தினையும் கண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக விஸ்டாரா நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரையில் சம்பள குறைப்பு செய்துள்ளதாகவும், இது நடப்பு ஆண்டு டிசம்பர் வரை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த சம்பள குறைப்பானது 40 சதவீத ஊழியர்களுக்கு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்ன காரணம்
மேலும் இந்த சம்பள குறைப்புக்கு காரணம், கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கனே என்றும் இந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
விஸ்டாரா நிறுவனம் தற்போது அதன் முழு சேவையில் 4,000 ஊழியர்களைக் கொண்டுள்ள நிலையில், எங்கள் ஊழியர்களில் சுமார் 60% பேர் சம்பள குறைப்பினால் பாதிக்கப்படுவதில்லை என்று விஸ்டாராவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நிச்சயம் செயல்படுத்துவோம்
விஸ்டாராவின் தலைமை செயல் அதிகாரியான Leslie Thng, ஒரு மின்னஞ்சலில் ஊழியர்களிடம் ஜூலை 1, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரையில் ஊதியக் குறைப்பு இருக்கும். ஊழியர்களுக்கான மாத ஊதியக் குறைப்பை நாங்கள் செயல்படுத்துவோம். இது விமானிகளைத் தவிர அனைவருக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
யாருக்கு எவ்வளவு சம்பளம் குறைப்பு
சரி யாருக்கு எவ்வளவு சம்பள குறைப்பு? 4 மற்றும் 5வது லெவலில் உள்ள ஊழியர்களுக்கு 15 சதவீதம் சம்பள குறைப்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மற்றும் 2,ம் நிலை மற்றும் 1சி ஊழியர்களுக்கும் 10 சதவீதம் சம்பள குறைப்பு இருக்கும் என்றும் கூறியுள்ளது. இதே முதல் லெவல் ஊழியர்களுக்கு 5 சதவீதம் சம்பள குறைப்பும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மீண்டு வரகொஞ்ச காலம் ஆகும்
மேலும் கொரோனாவினால் எங்களது செயல்திறன் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஓரு வேளை லாக்டவுன் முடிந்தாலும் கூட பயணிகளின் பயம் குறைய சிறிது காலம் ஆகும் என்றும் Leslie Thng கூறியுள்ளார். ஆக விமான துறையானது மீண்டு வர சிறிது காலம் ஆகும் என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications