கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்தியா ஸ்மார்ட்போன் விற்பனை கணிசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற துறைகள் சந்திக்கும் பாதிப்புகளை ஒப்பிடுகையில் ஸ்மார்ட்போன் விற்பனை சந்தை விற்பனை சரிவு அடையாமல் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஏற்கனவே இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் இடத்தில் இருந்த சாம்சங் நிறுவனத்தைச் சியோமி 2வது இடத்திற்குத் தள்ளிய நிலையில் தற்போது மற்றொரு சீன நிறுவனம் 2வது இடத்தில் இருந்து சாம்சங் நிறுவனத்தை 3வது இடத்திற்குத் தள்ளியுள்ளது.
மார்ச் காலாண்டு
கொரோனா பாதிப்பால் மார்ச் மாத கடைசியில் தான் வர்த்தகம் பாதிக்கப்பட்டது என்றாலும் அதிக மிகவும் அதிகமாக இருந்தது. இதன் மூலம் மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு வந்த மொபைல் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 30 மில்லியன் ஸ்மார்ட்போன் விற்பனை வந்த நிலையில், 2020 மார்ச் காலாண்டில் இதன் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்து 33.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சாம்சங் தொடர் சரிவு
இந்தியாவில் மற்ற அனைத்து துறைகளும் கடுமையான வர்த்தகப் பாதிப்புகளைச் சந்தித்து வந்த நிலையில், ஸ்மார்ட்போன் சந்தை நிலையான வர்த்தக வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் இந்திய சந்தையில் அதிக மொபைல் போன்கள் விற்பனை செய்யும் டாப் நிறுவனங்களில் சாம்சங் இந்த மார்ச் காலாண்டில் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு விவோ 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சியோமி
கடந்த சில வருடங்களாகவே சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்ற தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வரும் நிலையில் இந்த மார்ச் காலாண்டிலும் சுமார் 30.6 சதவீத வர்த்தகத்துடன் முதல் இடத்தில் உள்ளது.
இந்த மார்ச் காலாண்டில் சியோமி சுமார் 1.03 கோடி போன்களை விற்பனைக்காக அனுப்பியுள்ளது.
விவோ
2019 மார்ச் காலாண்டில் வெறும் 45 லட்ச போன்களை மட்டுமே விற்பனைக்கு அனுப்பிய வீவோ இந்த வருட மார்க் காலாண்டில் 67 லட்ச போன்களை விற்பனைக்காக அனுப்பியுள்ளது. இதன் மூலம் 19.9 சதவீத சந்தை வர்த்தகத்துடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளது விவோ.
சாம்சங்
ஆனால் கொரிய நிறுவனமான சாம்சங் கடந்த வருடம் 73 லட்ச போன்களை விற்பனைக்காக அனுப்பிய நிலையில், இந்த ஆண்டு 63 லட்ச போன்களை மட்டுமே அனுப்பியுள்ளது. இதுகிட்டதட்ட 13.7 சதவீத சரிவு என்பதால் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்குச் சாம்சங் தள்ளப்பட்டு உள்ளது.
இதன் மூலம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் தற்போது அதிகரித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications