வ உ சிதம்பரனார் துறைமுகம் 72.40 மீட்டர் நீளம் கொண்ட மிகப் பெரிய காற்றாலை இறகை (wind blade) கையாண்டு புதிய சாதனை படைத்து இருக்கிறது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 26.05.2020 அன்று இந்திய தயாரிப்பில் உருவான 72.40 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய காற்றாலை இறகை (wind blade) கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
ஜெர்மன் நாட்டு கொடியுடன் எம்.வி. மரியா (M.V. Maria) என்ற இக்கப்பல் 151.67 மீட்டர் நீளமும், 8.50 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது. இக்கப்பல் 26.05.2020 அன்று மதியம் 1.24 மணியளவில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வ.உ.சி. கப்பல் சரக்குதளம் 3-ஐ வந்தடைந்தது.
72.40 மீட்டர் நீளமுடைய காற்றாலை இறகு இக்கப்பலின் 3 ஹைட்ராலிக் பளுத்தூக்கி இயந்திரங்கள் மூலம் கையாளப்பட்டது. இதன் ஏற்றுமதியாளர்கள் திருவள்ளூரில் உள்ள நோர்டிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆவர். ஜெர்மனியிலுள்ள நோர்டிக்ஸ் ஏனர்ஜி GMBH என்ற நிறுவனத்திற்காக, பெல்ஜியத்திலுள்ள ஆன்டோப் துறைமுகத்திற்கு இக்கப்பலின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
இக்கப்பலின் சரக்கு கையாளுபவர்கள் மற்றும் கப்பல் முகவர்கள் ஆஸ்பின்வால் அன் கோ, தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களாவர். இந்தக் காற்றாலை இறகு, சென்னை அருகாமையிலுள்ள மாப்பேடு என்ற இடத்திலிருந்து வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வரை பிரத்தியேக லாரிகள் மூலம் NTC லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் எடுத்து வந்தார்கள்.
வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் திரு தா.கி. ராமச்சந்திரன், காற்றாலை உதிரி பாகங்களைக் கையாளுவதற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு இட வசதிகளும், துறைமுகத்தில் அமையப் பெற்றுள்ளது என்று கூறினார். மேலும் சாகர்மாலா திட்டத்தின் கீழ் வ.உ.சிதம்பரனார் துறைமுக நிலங்களில் தொழிற்சாலைகள் துவங்குவதற்காக 'Tuticorin SPEEDZ' (Smart Port Employment & Economic Develotpment Zone) என்ற திட்டத்தின் மூலம் தொழிற்பூங்கா அமைப்பதற்கு தேவையான 1,000 ஏக்கர் பரப்பளவு நிலத்தினை ஒதுக்கியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகள் உருவாவதற்கு தேவையான அனைத்து வசதிகள் இடம் பெறுவது மட்டுமல்லாமல், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட பொருட்களை குறைந்த போக்குவரத்து செலவில் உலக சந்தையில் விநியோகம் செய்யலாம் என்று கூறினார்.
மேற்சொன்ன தகவலை வ.உ.சிதம்பரனார் துறை முக பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications