அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக இறக்குமதியாளர்களுக்கு லாபம் கிடைத்தாலும் ஏற்றுமதியாளர்கள் உள்பட பலருக்கு நஷ்டத்தை கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால் மாணவர்களின் படிப்பு, தொழில் அதிபர்களின் தொழில் மற்றும் சுற்றுலா துறை ஆகியவை எந்த அளவுக்கு பாதிப்படைந்துள்ளன என்பதை தற்போது பார்ப்போம்.
இந்திய ரூபாய்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 75 என்று இருந்த நிலையில் தற்போது படிப்படியாக உயர்ந்து 83 என்பதை தாண்டி உள்ளது என்பது இந்தியர்கள் அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகும்.
ரூபாய் மதிப்பு சரிவு
இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் கடந்த ஏழு மாதங்களில் இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு பணவீக்கம், அரசியல் பதட்டங்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் விற்பனை செய்வது, கச்சா எண்ணெய் விலை உயர்வு உட்பட பல காரணங்கள் கூறப்படுகின்றன.
மாணவர்கள்
இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு சாதாரண இந்திய குடிமகனை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை தற்போது பார்ப்போம், வெளிநாட்டில் படித்து கொண்டு இருப்பவர்கள் அல்லது வெளிநாட்டில் படிக்க திட்டமிடுபவர்கள் இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் மிகப்பெரிய பாதிப்பு அடைவார்கள். அவர்கள் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலதிபர்கள்
அதேபோல் வெளிநாட்டில் தொழில் செய்ய திட்டமிட்டவர்கள் ஏற்கனவே திட்டமிட்ட பட்ஜெட்டை விட தற்போது அதிகமாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ரூபாயின் மதிப்பு தொழில் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா
அதேபோல் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தவர்கள் ஏற்கனவே போட்ட பட்ஜெட்டை விட தற்போது அதிக பட்ஜெட் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடு சென்றால் டாலரில் தான் அதிக செலவு செய்ய வேண்டும் என்பதால் அதற்கு ஈடாக அதிகளவில் இந்திய ரூபாய் தரவேண்டிய நிலை ஏற்படும். எனவே பலர் வெளிநாட்டு பயணத்தை ஒத்தி வைத்திருப்பதாகவும் ரத்து செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு
இந்திய ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக மாணவர்களின் கல்வி, தொழிலதிபர்களின் தொழில் சுற்றுலாத்துறை உள்பட பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது என்பதால் மத்திய அரசு உடனடியாக இந்திய ரூபாய் மதிப்பு சரிவை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications