இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தொடர்ந்து சரிவில் இருந்து காப்பாற்ற அனைத்து வழிகளிலும் போராடி வரும் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக ஒரு துணை கவர்னரை தேர்வு செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் தேர்வை நாடாளுமன்றத்தின் நியமன குழு ஆய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் இந்திய ரிசர்வ் வங்கியின் 4வது துணை கவர்னராக ரபி சங்கர் நியமிக்கப்பட்டு உள்ளதாக ஆர்பிஐ தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
4வது துணை கவர்னராக ரபி சங்கர்
ரிசர்வ் வங்கியில் தற்போது துணை கவர்னராக இருக்கும் பி.பி. கனுங்கோ ஏப்ரல் 2ஆம் தேதி ஓய்வுபெற்ற நிலையில், இப்பதவியில் ரபி சங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் மகேஷ் குமார் ஜெயின், மைக்கேல் பத்ரா, ரஜேஷ்வர் ராவ் ஆகியோரை தொடர்ந்து 4வது துணை கவர்னராக ரபி சங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
பின்டெக் இன்பர்மேஷன் டெக்னாலஜி
பொருளாதாரத்தில் M.Phil பட்டம் பெற்ற ரபி சங்கர் ரிசர்வ் வங்கியில் பல முக்கியப் பதவிகளிலும், பணிகளையும் செய்திருக்கும் நிலையில், தற்போது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பின்டெக் இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் ரிஸ்க் மேனேஜ்மென்ட் பிரிவுகளை நிர்வாகம் செய்ய உள்ளார்.
IMF குழு
ரிசர்வ் வங்கியின் பல முக்கியக் குழுக்களில் இடம்பெற்று உள்ள ரபி சங்கர் 2005-11 வரையிலான காலகட்டத்தில் பங்களாதேஷ் ரிசர்வ் வங்கியின் பாண்ட் மார்கெட் மற்றும் டெபிட் மேனேஜ்மென்ட் பிராசஸ் ஆகியவற்றை உருவாக்க IMF நியமித்த குழுவில் ரபி சங்கர் மிக முக்கியமானவர். இது மட்டும் அல்லாமல் 2008-2014 வரையில் மத்திய நிதியமைச்சகத்தில் பணியாற்றியவர் இவர்.
IFTAS பிரிவின் தலைவர்
இவை அனைத்தையும் தாண்டி ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான இந்தியன் பைனான்சியல் டெக்னாலஜி அண்ட் அலைய்டு சர்வீசஸ் (IFTAS) பிரிவின் தலைவராக ஜூன் 2020ல் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய துணை கவர்னராக ரபி சங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications