தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னணி நிறுவனமான விப்ரோ நிறுவனத்தில் இருந்து, அதன் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான அபிதாலி நீமூச்வாலா விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
52 வயதான நீமுச்வாலா, தான் சில குடும்ப கடமைகள் காரணாமாக வெளியேறுவதாக தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் விப்ரோவிற்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதவியில் நீடிப்பார் என்றும் ஒழுங்கு முறை தாக்கல் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நீமுச்வாலா கடந்த ஏப்ரல் 2015ல் விப்ரோவில் தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரியாக செயல்பட்டார். இதற்கு முன்பு டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, அசிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாத் பிரேம்ஜி முழுநேர இயக்குநராக பொறுப்பேற்றார். அதே நேரம் அபுதாலி நீமுச்வாலா இந்த நிறுவனத்தில் புதிய தலைமை செயல் அதிகாரியாகவும் அந்த சமயத்தில் பொறுப்பேற்றார்.
நீமுச்வாலா விப்ரோவின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது சுமார் 13% ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிகப்பெரிய நான்காவது தகவல் தொழில் நுட்ப நிறுவனமான விப்ரோ, நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் நிகரலாபம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 35.1% அதிகரித்து 2,552.60 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பெங்களுரை தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் வளர்ச்சி என்பது தற்போது ஒரு கவலையாக உள்ளது. மேலும் விப்ரோ அதன் மேற்கத்திய வாடிக்கையாளர்களிடமிருந்து செலவு நெருக்கடியால் பாதிகப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் அவர்கள் குறைந்த மலிவான விலைகளில் சேவைகளை பெற விரும்புவதாகவும் ராய்ட்டர்ஸ் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நீமுச்வாலா தனது பதவி விலகல் பற்றி கூறுகையில், 75 ஆண்டுகால மரபு கொண்ட விப்ரோ என்ற ஒரு பெரும் நிறுவனத்திற்கு சேவை செய்வது எனது மரியாதை, அது எனக்கு ஒரு பாக்கியம் என்றும் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் மற்ற விவரங்களை கூற மறுத்து விட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதே ரிஸாத் பிரேம்ஜி இது குறித்து கூறுகையில் அவரின் பங்களிப்புக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications