சர்வதேச ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலையானது 4% ஏற்றம் கண்டுள்ளது. ஐடி துறையின் முக்கிய நிறுவனமான விப்ரோ நிறுவனம், பிரேசில் ஐடி நிறுவனமான IVIA Servios de lnformitica Ltda நிறுவனத்தினை கையகப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவின் பங்கு விலையானது, தற்போது 2.53% அதிகரித்து 283.50 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று 276.50 ரூபாயாக இதன் பங்கு விலையானது முடிவடைந்த நிலையில், தற்போது 283.50 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
விப்ரோ நிறுவனம் IVIA நிறுவனத்தினை 22.4 மில்லியன் டாலர் முதலீடு செய்து கையகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
விப்ரோவின் பங்கு விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ் மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 13% ஏற்றம் கண்டுள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து 14.56% ஏற்றம் கண்டுள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1.61 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் 4.32 லட்சம் பங்கானது கைமாறியுள்ளது. இதனால் இந்த பங்கு பரிமாற்றத்தின் டர்ன்ஓவர் 12.20 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
IVIA நிறுவனமானது பிரேசில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கணினி மேம்பாடு மற்றும் பராமரிப்பு, ஆலோசனை மற்றும் திட்ட மேலாண்மை, சேவைகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குபவர். SAP தடம் குறிப்பதற்காக கூகிள் கிளவுட் உடன் நிறுவனம் ஒத்துழைத்த பிறகு விப்ரோ பங்கு விலையானது 3% அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒருங்கிணைந்த லாபம் ஓரளவு அதிகரித்து 2,390.40 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் ஒருங்கிணைந்த லாபம் 2,387.6 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் வருவாய் 15,571 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் இது முந்தைய காலாண்டில் 15.566.6 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் தான் காணப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications