டெல்லி: தற்போது உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயினால், மில்லியன் கணக்கானோர் தங்களது வேலையினை இழந்து தவித்து வருகின்றனர்.
சில லட்சம் பேர் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். கொரோனா நெருக்கடியின் காரணமாக இன்னும் சில லட்சம் பேர் தங்களது வேலையினை இழக்கும் தருவாயில் உள்ளனர். ஏனெனில் நிறுவனங்கள் செலவினங்களை குறைக்கும் பொருட்டு, பணி நீக்கம் என்னும் அஸ்திரத்தினை கையில் எடுத்து வருகின்றன.

ஆனால் இந்த நெருக்கடியான காலத்திலும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவது, மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக naukri தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் வீட்டில் இருந்து பணி புரியும் வேலையானது 300% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.எனினும் இது எந்த துறையில் அதிகரித்துள்ளது என்ற விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்ட நிலையில், பணியமர்த்தல், பணி நீக்கம் என்பது மாறி மாறி வருகின்றன. இதற்கிடையில் பல துறைகளில் வீட்டில் இருந்து பணி புரிவது அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் தரவுகள் கூறுகின்றன.
அதோடு ஏப்ரல் மாதத்தில் இருந்து வீட்டில் இருந்து மக்கள் வேலை செய்யும் வேலைகளை தேடுகின்றனர். கடந்த ஐந்து மாதத்தில் நாக்குரி. காம் தேடலில் அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகளில் work from home என்பதும் தான் முதலிடத்தில் உள்ளது. இது முன்பை விட 7 மடங்கு அதிகரித்துள்ளது என்று பல தகவல்கள் வெளியாகின.
நாக்குரி.காமின் தலைமை வணிக அதிகாரியான பவன் கோயலின் கூற்றுப்படி, கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் இருந்து பணிபுரிவது அதிகரித்துள்ளது. ஆனால் உலகளாவிய தொற்று நோயினால் இது பல மடங்கு அதிகரித்துள்ளது.
தற்போது கொரோனாவின் காரணமாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய கூறி வருகின்றன. குறிப்பாக பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த ஆண்டு இறுதி வரை கூட வீட்டில் இருந்து பணி புரிய கூறியுள்ளன. இன்னும் சில சர்வதேச நிறுவனங்கள் எப்போதும் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய கூறலாம் என ஆலோசித்து வருவதாகவும் கூறின. இதற்கிடையில் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தங்களது வேலையினை இழந்த ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய இணையத்தில் தேடுவதும் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications