பணம் நமக்கு எப்போ தேவையோ அப்போது யாருக்கும் கொடுக்க மாட்டாங்க.. நிகில் காமத் ..!

இந்தியாவின் இளம் தொழிலதிபரான நிகில் காமத், இன்று இந்திய பில்லியனர்களில் ஒருவராக வெற்றிகரமான வலம் வந்து கொண்டுள்ளார்.

தனது 17 வயதில் சில ஆயிரங்கள் சம்பளத்தில் தனது பயணத்தை தொடங்கிய நிகில் காமத், தனது மூத்த சகோதரர் நிதின் காமத்துடன் இணைந்து ஜெரோதாவை இணைந்து நிறுவினார்.

கடந்த 2020ல் போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றனர். ஆரம்பத்தியில் தனது தந்தையின் பணி நிமித்தம் காரணமாக, அடிக்கடி வேறு வேறு ஊர்களுக்கு மாறிச் சென்றதால் தனக்கு படிப்பின் மீதான ஆர்வமே குறைந்ததாக கூறியிருந்தார். ஆனால் இன்றோ ஆயிரம் ஆயிரம் பட்டதாரி இளைஞர்களும் அவரின் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர்.

 பண நிர்வாகம்

பண நிர்வாகம்

மேலும் தனது 18 வயதிலேயே பங்குகளாய் சரியாக வாங்கி வர்த்தகம் செய்ய ஆரம்பித்ததாகவும், அவரின் தந்தை பணத்தை நிகிலிடம் கொடுத்து நிர்வகிக்க சொன்னதாகவும், அதனை சரியாக செய்ததாகவும் தெரிவித்து இருந்தார். இதன் பிறகு தான் 2009ல் ஜெரோதாவை தனது சகோதரருடன் இணைந்து பணியாற்றினார்.

 செய்வதை சரியாக செய்யணும்

செய்வதை சரியாக செய்யணும்

அடிக்கடி பணம் பற்றி பேசு நிகில் இப்போது உழைக்காததை, இன்னும் 5 ஆண்டுகள் கழித்து யோசிக்க கூடாது என்று கூறுபவர். ஆக செய்வதை இப்போதே சரியாக சரியாக செய்ய வேண்டும். அனைத்தையும் சரியாக முயற்சி செய்யவே ஒரு நம்பிக்கை வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

தேவைப்படும்போது பலரும் அதை வழங்கவில்லை

தேவைப்படும்போது பலரும் அதை வழங்கவில்லை

இன்றும் லாபகரமான நிறுவனங்களில் ஒன்றாக அறியப்படும் ஜெரோதா, ஆரம்ப காலத்தில் தானும் நிடதி திரட்ட ஆசைப்பட்டதாகவும், ஆனால் விதி வேறு திட்டங்களை கொண்டு இருந்தது என கூறியிருந்தார்.

எங்களுக்கு பணம் தேவைப்படும்போது, பலர் அதை வழங்கவில்லை என கூறியுள்ளார். மேலும் முதலீட்டாளார்கள் காமத் சகோதர்களை தங்கள் கதவுகளை தட்டிய நிலையில், 8 ஆண்டுகள் ஏற்கனவே கடந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஏற்கனவே லாபகரமான நிறுவனத்தினை உருவாக்கினோம். ஆக அவர்களுக்கு வெளிப்புற நிதி என்பது தேவைப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

ஸ்டார்ட் அப்கள்

ஸ்டார்ட் அப்கள்

இந்திய ஸ்டார்ப் அப்களில் சமீபத்திய காலமாக நிதி திரட்டல் என்பது குறைந்துள்ளதே என்பது குறித்து பேசியவர், நிதியளிப்பு என்பது கணிசமாக குறைந்துள்ளது. அவர்கள் லாபத்திற்கான பாதையில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. எனினும் இன்று சூழ்நிலை மாறிவிட்டது. லாபத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

பணி நீக்க விவாதம்

பணி நீக்க விவாதம்

தற்போது சர்வதேச அளவில் பணி நீக்கம் என்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களில் அமேசான், மெட்டா, ஹெச் பி , கூகுள் மற்றும் பிற முன்னணி நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளன. இதே இந்தியாவில் ஓலா, பைஜூஸ், அன்அகாடமி, வேதாந்து உள்ளிட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பலரையும் பணி நீக்கம் செய்துள்ளன.

பணி நீக்கம் தொடரும்

பணி நீக்கம் தொடரும்

தொழில்நுட்பம் செய்து வரும் பணி நீக்கம் செய்து வரும் குறித்து பதிலளித்தவர், பல ஊழியர்களைக் கொண்டிருக்க வேண்டிய தேவையை, தொழில் நுட்பம் என்பது குறைக்கிறது. ஆக இந்த போக்கானது தொடரலாம். இந்த போக்கு தொடரும் இனியும்தொடரலாம் என்பது கவலையளிக்கும் ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+