அசல் 2000 ரூபாய் நோட்டையும் கள்ளப்பணத்தையும் எப்படிக் கண்டறிவது.
புதிய 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டதில் இருந்து சிக்கல்கள் பல இருந்த போதிலும் அதில் உள்ள பாதுகாப்பு குறித்துப் பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.
எனவே உங்களுக்காக அசல் 2000 ரூபாய் நோட்டையும் கள்ளப்பணத்தையும் எப்படிக் கண்டறிவது என்று இங்குப் பார்ப்போம்.
ஏழு வரி
ஏழு கோணங்களுடையது கசிவு வரி இடதுபக்கம் மற்றும் வலது பக்கம் என இரு பக்கங்களிலும் இருக்கும்.
ஆர்பிஐ
மகாத்மா காந்தி படத்தில் ஆர்பிஐ என்று எழுதப்பட்டு இருக்கும், இதனைப் பூதக்கண்ணாடியின் உதவியுடன் மட்டுமே பார்க்க இயலும்.
பாதுகாப்பு நூல்
வண்ண மாற்றுவதால் பாதுகாப்பு நூலில் பாரத் என ஹிந்தியிலும் ஆர்பிஐ மற்றும் 2000 எனவும் பொரிக்கப்பட்டு இருக்கும். நொட்டை அசைக்கும் போது பச்சை நிறத்தில் இருந்து நீல நிறத்திற்கு மாறும்.
2,000 என எழுத்துரு
குறிப்பிட்ட அளவிலான விளக்கின் வெளிச்சத்தில் பார்க்கும் போது 2,000 என எழுத்துரு பொரிக்கப்பட்டு இருக்கும்.
45 டிகிரி கோணத்தில் பார்க்கும் போது 2,000 என மறைவிம்பம் காணப்படும்.
நீர்க் குறி படம்
மகாத்மா காந்தியின் நீர்க் குறி படமும், 2000 என மின்தட்டச்சும் செய்யப்பட்டு இருக்கும்.
ரூபாய் நோட்டின் வரிசை எண்ணின் எழுத்துக்கள் சிறிய எண்ணாகத் தொடங்கி பெரிதாகப் பொரிக்கப்பட்டு இருக்கும்.
பின்வரும் வதந்திகளைத் தவிர்க்கவும்
புதிய ரூபாய் நோட்டுகளைக் கண்காணிக்க நேனோ சிப், கள்ள நோட்டுகளின் நிறம் நீரில் பட்டால் அழிந்துவிடும், நோட்டில் ஏதேனும் எழுதினால் செல்லாது போன்றவற்றைத் தவிக்கவும்.
புதிய நோட்டுகளில் எந்த சிப்பும் பொருத்தப்படவில்லை. துவைக்கும் போது நீரில் படலாம். அதற்காக இந்த நோட்டுகளுக்குத் தங்குதடையற்ற நம்பகத்தன்மை சோதனை போன்றவை ஏதும் இல்லை. மேலும் புதிய நோட்டுகளின் மீது ஏதேனும் எழுதி இரிந்தாலும் நோட்டு செல்லும்.


Click it and Unblock the Notifications