நீங்கள் ரூ. 30 லட்சம் வரையிலான வீட்டுக்கடன் வாங்கத் திட்டமிட்டிருந்தால், ஆக்சிஸ் வங்கியின் சுப ஆரம்ப் (Shubh Aarambh) திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்த வீட்டுக்கடன் சலுகை தளர்த்தப்பட்ட 12 மாதாந்திரத் தவணையுடன் வீட்டுக்கடனுக்கான குறைக்கப்பட்ட கால வரையறையின் அடிப்படையில் வருகிறது.
சிக்கல்
மலிவாகக் கிடைக்கக்கூடிய வீடுகளுக்கான கடன் அளவை அதிகரிக்க வேண்டும் என்று ஆக்சிஸ் வங்கிக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
ஆனால் இந்தச் சலுகைக் கிடைக்கப்பெறுவதற்கு, வீட்டுக்கடன் வாங்குபவர் பணத்தைத் திரும்பச் செலுத்துவதில் தவறக்கூடாது, ஒருவேளை 4 மாதாந்திரத் தவணைத் திட்டங்களுக்கு மேல் தவறினால், கடன் தொகை பட்டுவாடா செய்யப்பட்டத் தேதியிலிருந்து 4 வது, 8 வது மற்றும் 12 வது வருடங்கள் தள்ளுபடி செய்யப்படும்.
இந்த வீடுகளுக்கு கடன் வழங்கப்படும்
இந்தப் பிரிவின் கீழ் வழங்கப்படும் வீட்டுக்கடனை கட்டுமானத்தின் கீழுள்ள கட்டடங்களுக்கும், குடிபுகத் தயாராக இருக்கும் கட்டடங்களுக்கும், மறுவிற்பனை வீடுகள் அத்துடன் சுய கட்டுமானம் அல்லது மனை மற்றும் அதன் கட்டுமானம் ஆகியவற்றிற்கு பெற்றுக் கொள்ளலாம்.
கூடுதல் கட்டணம் இல்லை
மேலும் இந்தச் சலுகையில், இதர வங்கிகளின் வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களும் எந்தவிதமானக் கூடுதல் கட்டணங்களும் இல்லாமல் ஆக்சிஸ் வங்கியின் இந்தப் புதிய திட்டத்திற்கு மாறிக் கொள்ளலாம்.
ஆக்சிஸ் வங்கி
இந்தப் புதிய வீட்டுக் கடன் திட்ட அறிமுகத்தின் போது பேசிய ஆக்சிஸ் வங்கியின் வங்கி வர்த்தகப் பிரிவு இயக்குனர், திரு. ராஜீவ் ஆனந்த், "மலிவு விலையில் வீடுகளை வழங்கும் திட்டத்தில் அரசாங்கம் இடைவிடாமல் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தத் தொடக்க முயற்சியில் தொடர்ந்து பங்குநராக இருப்பதில் ஆக்சிஸ் வங்கி பெருமிதமாக உணர்கிறது. இந்தத் தயாரிப்பின் மூலம் மிகுந்த போட்டி நிறைந்த சூழலில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டக் கட்டணங்கள் எதுவும் இல்லாமல் மேற்கொண்டு கூடுதலான மதிப்பீட்டை வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். மேலும், இது வாடிக்கையாளர்கள் வழக்கமாகக் கடன் தொகையை திருப்பிச் செலுத்தும்படி ஊக்குவிக்கும்." என்று கூறினார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications