நாம் அனைவரும் நம்முடைய எதிர்காலத்திற்காகச் சேமிக்கின்றோம். சேமிப்பதற்காகத் திட்டமிடுகின்றோம். இத்தகைய நிதித் திட்டமிடல்கள் பணத்தைச் சேமிப்துடன் நின்று விடாமல், அதைப் பாதுகாப்பாகப் பலமடங்கு பெருக்கவும் செய்ய வேண்டும். அதிலும் நாம் நம்முடைய ஓய்வு காலத்திற்காகச் சேமிக்கும் பொழுது மிகச் சரியாகத் திட்டமிட வேண்டும். ஓய்வு கால நிதித் திட்டமிடலை நாம் நம்முடைய மத்திய வயதில் அதாவது 30 முதல் 40 வயதிற்குள் தொடங்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய ஓய்வு காலத்திற்குத் தேவையான நிதி நம்மிடம் சேமிப்பாக இருக்கும்.
நம்முடைய இளமைக்காலம் முழுவதும் கஷ்டப்பட்டுச் சேமித்த நிதியை மிகவும் பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும். பொதுவாக மூத்த குடிமக்களுக்கான முதலீடு என்பது பாதுகாப்பு மிகுந்ததாக இருக்க வேண்டும். பாதுகாப்பு அம்சத்தைக் கணக்கில் கொள்ளும் பொழுது அதிலிருந்து கிடைக்கும் வருவாயும் மிகக் குறைவாக இருக்கும். எனினும் இந்திய அரசாங்கம் முத்த குடிமக்களுக்குப் பல்வேறு நிதிச் சலுகைகளை வழங்கி வருகின்றது. இந்தியாவில், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களுக்கு 0.5 சதவீதம் அதிகமான வட்டி வழங்கப்படுகின்றது. இதைத் தவிர்த்துச் சொந்தமாக வியாபாரம் செய்யும் மூத்த குடிமக்கள் அல்லது பிற வகைகளில் வருவாய் ஈட்டும் மூத்த குடிமக்கள் முன்கூடியே வரிச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் அவர்களுக்குப் பல்வேறு நன்மைகளை வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சேமிப்புத் திட்டங்களுக்கு மிக அதிக அளவாகச் சுமார் 8 சதவீத வட்டி அளிக்கப்படுகின்றது. இந்திய அரசாங்க விதிகளின்படி NRI மற்றும் HUF போன்றோர் இந்த மூத்த குடிமக்கள் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கை திறக்க இயலாது. இத்தகைய திட்டங்களில் முதிர்வுக் காலம் மூன்று முதல் ஐந்து வருடங்களாக இருக்கின்றது. நாம் இப்பொழுது இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டங்களைப் பற்றிப் பார்ப்போம்.
எஸ்.பி.ஐ. இன் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்
60 வயதை அடைந்த தனிநபர்கள் எவரும் இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு புதிய கணக்கைத் திறக்க இயலும். இந்தக் கணக்கை திறக்கப் படிவம் ஏ வை பூர்த்திச் செய்து அதனுடன் கணக்கு துவங்கும் ஒரு விண்ணப்பப் படிவம் மற்றும் 60 வயதை பூர்த்தி செய்ததற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் பொழுது ரூ 1000 அல்லது அதனுடைய மடங்காகப் பணத்தை வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும்.
ஒருவருடைய வயது 60க்கு குறைவாகவும் 55 வயதிற்கு அதிகமாகவும் இருந்தாலும் அவரால் இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்க இயலும். எனினும் அவர் விருப்ப ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
ஒரு நபர் இந்தத் திட்டத்தின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கை திறக்க இயலும். எனினும் இந்தத் திட்டங்களில் செய்யப்படும் மொத்த முதலீடு ரூ 15 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணத்தைத் திரும்ப எடுப்பதற்கான வரம்புகள்
கணக்கைத் திறந்த பின்னர் ஒரு வருடம் கழித்தே, நம்மால் பணத்தைத் திரும்ப எடுக்க இயலும். எனினும் இவ்வாறு பணத்தைத் திரும்ப எடுக்கும் பொழுது அதற்குரிய அபராதத்தைச் செலுத்த வேண்டும்.
வட்டி விகிதங்கள்
இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படும் கணக்கின்ற்கு, அந்தக் கணக்குத் திறக்கப்பட்ட தேதியிலிருந்து ஆண்டுக்கு 8.6 சதவிகித வட்டி வழங்கப்படுகின்றது. வட்டி ஒவ்வொரு காலாண்டின் இறுதியில் அதாவது மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 மற்றும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31, தேதிகளில் வழங்கப்படுகின்றது.
எனினும் இந்தத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னெவெனில், இந்தக் கணக்கிற்குக் கூட்டு வட்டி கிடையாது. சாதாரண வங்கிக் கணக்கிற்குக் கூட்டு வட்டி வழங்கப்படுகின்றது.
முதிர்வு
கணக்குத் திறந்த தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் முடிந்தபின், எழுத்துமூலமான விண்ணப்பத்துடன் சேர்த்து, கணக்குப் புத்தகம், படிவம் ஈ ஆகியவற்றைச் சமர்ப்பித்து முதிர்வு தொகையைத் திரும்பப் பெறலாம்.
கணக்குதாரர் இறந்தால்: கணக்கு வைத்திருப்பவர் எதிர்பாராமல் இறந்தால், அந்தக் கணக்கு உடனடியாக மூடப்படும். வாடிக்கையாளர் சமர்ப்பித்த படிவம் எப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வாரிசுதாரர் அல்லது சட்டப்படியான வாரிசுதாரர்களுக்கு அந்தக் கணக்கில் உள்ள தொகை வழங்கப்படும்.
ஐசிஐசிஐ வங்கியின் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணக்குகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட ஒரே தனியார் வங்கி ICICI வங்கி ஆகும்.
இந்த திட்டத்தின் வழக்கமாக வழங்கப்படும் வருமான வரி அல்லது செல்வ வரிச் சலுகை போன்ற எதுவும் இந்தக் கணக்கிற்கு வழங்கப்படுவதில்லை. தனிநபர்களின் வருமானத்திற்கு விதிக்கப்படும் அனைத்து வரி விகிதங்களும் இந்தக் கணக்கிற்குப் பொருந்தும்.
பணத்தைத் திரும்ப எடுப்பதற்கான வரம்புகள்
பிற வங்கிகளில் இந்தத் திட்டத்திற்கு வழங்கப்படும் அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் இந்தக் கணக்கிற்கும் பொருந்தும். கணக்குத் தொடங்கிய காலத்தில் இருந்து ஒரு வருடம் கழித்து ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர்ப் பணத்தைத் திரும்ப எடுத்தால், நீங்கள் செலுத்திய வைப்பு நிதியின் மதிப்பில் சுமார் ஒன்றரை சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். இரண்டு ஆண்டுகள் முடிந்தபின் பணத்தைத் திரும்பப் பெற்றால், வைப்பு நிதியின் மொத்த மதிப்பில் சுமார் 1 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகின்றதும். சேமிப்பீட்டுத் திட்டத்தில் 1% அளவுக்குச் சமமான தொகை கழிக்கப்படும். தனிப்பட்ட முறையில் வங்கிகளின் அபராதத் தொகையைச் சரி செய்வது மிகவும் நல்லதும்.
வட்டி விகிதம்:
இந்தக் கணக்கிற்குச் சுமார் 8.3 சதவீத வட்டி வழங்கப்படுகின்றதும். எனினும் இந்த வட்டி விகிதம் அரசாங்கத்தின் நிர்ணயக் கொள்கையைப் பொருத்து வருடந்தோறும் மாறுபடும். இந்த வங்கிக் கணக்கில் வழங்கப்படும் வட்டிக்கு TDS பொருந்தும்.
ஒவ்வொரு நிதியாண்ட்டின் காலாண்டிலும் அதாவது மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 மற்றும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31, வட்டி வழங்கப்படும்.
மூன்று ஆண்டுகளுக்கு மேலதிக காலத்திற்கு இந்தக் கணக்கை விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் நீட்டிப்புச் செய்யலாம்.
தபால் அலுவலகத்தின் மூத்த குடிமகன் வைப்புத் திட்டம்
வங்கிகளைப் போன்ற அஞ்சல் நிலையமும் மூத்த குடிமக்களுக்கான இந்தத் திட்டத்தை வழங்குகின்றன. 55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மற்றும் 60 வயதிற்கும் குறைவான வயதுக்குட்பட்ட தனிநபர்கள் தாங்கள் ஓய்வு பெற்ற ஒரு மாதத்திற்குள் இந்தக் கணக்கை தொடங்க வேண்டும். எனினும் இந்தக் கணக்கில் செலுத்தப்படும் தொகையானது அந்த நபரின் ஓய்வூதிய பலன்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
முதிர்வு தொகை அல்லது கணக்கை மூடும் முறைகள்
ஒரு ஆண்டிற்கு முன்னர் வைப்புத் தொகையைத் திரும்ப எடுக்க வேண்டுமெனில், மொத்த வைப்புத் தொகையின் மதிப்பில் சுமார் 1.5 சதவீதம் அபராதமாகச் செலுத்த வேண்டும். அதுவே 2 ஆண்டுகளுக்குப் பிறகு வைப்பு நிதியைத் திரும்ப எடுக்க நினைத்தால் 1 சதவீத அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும்.
வட்டி விகிதங்கள்
தற்போது, இந்தச் சேமிப்புக் கணக்கிற்குச் சுமார் 8.3 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது. இந்த வட்டி ஒவ்வொரு காலாண்டிற்கும் அதாவது மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் வழங்கப்படுகின்றது.
1.4.2007 ம் தேதியில் இருந்து வருமான வரிச் சட்டம், 1961 ன் பிரிவு 80C இன் நன்மைகள் இந்த தபால் நிலைய முதலீடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தேவையான ஆவணங்கள்
1 பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், இது தபால் நிலையம் அல்லது வங்கியில் கிடைக்கும்
2. உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் (KYC) படிவம்
3. விண்ணப்பதாரரின் 3 புகைப்படங்கள்
4 நிரந்தரக் கணக்கு எண் (PAN)
5 ஆதார்
6 முகவரிக்கான ஆதாரம்
7 வயதிற்கான ஆதாரம்
8. ஓய்வு பெற்றவர்களின் விஷயத்தில், அவருடைய முதலாளியிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ். அந்தச் சான்றிதழில் ஓய்வு பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
தீர்மானம்
இந்த மூத்த குடிமக்களுக்கான திட்டங்களை வழங்கும் மூன்று நிறுவனங்களில், எஸ்.பி.ஐ. மட்டுமே அதிக வட்டி வழங்குகின்றது. சேவை மற்றும் நெகிழ்வுத்திறன் அடிப்படையில் இந்த மூன்று விருப்பங்களுக்கிடையில் (பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, தபால் .நிலையம் ஆகியவற்றில் ஒன்று) ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். ஏனெனில் வட்டி விகிதத்தில் உள்ள சிறிய வித்தியாசம் மொத்த வருமானத்தைப் பொருத்த வரை அதிகப் பாதிப்பை ஏற்படுத்தாது. அரசாங்கத்தினால் வழங்கப்படும் இந்தத் திட்டத்தின் சிறப்புகள் மற்றும் நன்மைகளொன்று போன்றே இருக்கின்றன.