அக்டோபர் 1 முதல் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளின் பழைய காசோலை புத்தங்கள் செல்லாது என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.
இது பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை இணைக்கப்பட்டன. இதன் காரணமாக இந்த விதிகள் அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளார்கள், பஞ்சாப் நேஷனல் வங்கியின் காசோலை புத்தகத்தினை பெற்றுக் கொள்ளலாம் எனவும், புதிய புத்தகத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஐஎஃப்எஸ்சி (IFSC code) கோடு மற்றும் எம் ஐ சி ஆர் கோடு (MICR code) உடன் வரும் எனவும் தெரிவித்துள்ளது.
புதிய செக் புக் எப்படி பெறுவது?
மேற்கொண்டு புதிய காசோலைப் புத்தகத்தை சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளை சென்று அணுகலாம் எனவும் தனது அறிக்கையில் பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஏடிஎம், இன்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட அதிகாரப்பூர்வமாக தளங்களிலும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ கட்டணமில்லா கஸ்டமர் கேர் நம்பரான 18001802222 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கட்டண சலுகை
மேலும் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி வரவிருக்கும் விழாக்கால பருவத்தையொட்டி, இதனுடன் கூடுதலாக சில சலுகைகளையும் அறிவித்துள்ளது. அது பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் பண்டிகையின் ஒரு பகுதியாக சில சில்லறை பொருட்களின் மீதான சேவை கட்டணங்களையும், செயல்பாட்டு கட்டணங்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
வீட்டுக் கடன்- கார் கடன்
இவற்றோடு வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் 6.60% ஆகவும், கார் கடனுக்கான வட்டி விகிதம் 7.15%ல் இருந்து ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளது. இது மேற்கொண்டு புதிய வாடிக்கையாளர்களை கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்திய வாரங்களாகவே தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் என போட்டி போட்டுக் கொண்டு வட்டி விகிதத்தினை குறைத்து வருகின்றன.
இந்த நிலையில் தான் பஞ்சாப் நேஷனல் வங்கியும் வட்டியை குறைத்துள்ளது. பஞ்சாப் வங்கியின் இந்த சலுகைகள் டிசம்பர் 31 2021 வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அலகாபாத் வங்கியின் அறிவிப்பு
அலகாபாத் வங்கியும் அடுத்த மாதம் முதல் கொண்டு தனது வாடிக்கையாளார்களின் காசோலைப் புத்தகங்கள் மற்றும் எம் ஐ சி ஆர் குறியீட்டை செல்லாது என அறிவித்துள்ளது. புதிய செக் புக் மற்றும் புதிய சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் அருகில் உள்ள கிளையில் சென்று, புதிய காசோலை புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதோடு வாடிக்கையாளர்கள் இணைய வங்கியின் மூலமாகவும், மொபைல் பேங்கிங் மூலமாகவோ கூட இதற்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
ட்விட்டரில் அறிவிப்பு
இது குறித்து இவ்வங்கிகள் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளன. ஆக உங்களது செக் புக் மற்றும் IFSC கோடு என செல்லாமல் போகும் முன்பே சென்று மாற்றிக் கொள்ளலாம். இல்லையெனில் உங்களது இணைய வங்கி பரிவர்த்தனைகள் கூட பாதிக்கப்படலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications