அக்டோபர் 1 முதல் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளின் பழைய காசோலை புத்தங்கள் செல்லாது என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.
இது பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை இணைக்கப்பட்டன. இதன் காரணமாக இந்த விதிகள் அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளார்கள், பஞ்சாப் நேஷனல் வங்கியின் காசோலை புத்தகத்தினை பெற்றுக் கொள்ளலாம் எனவும், புதிய புத்தகத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஐஎஃப்எஸ்சி (IFSC code) கோடு மற்றும் எம் ஐ சி ஆர் கோடு (MICR code) உடன் வரும் எனவும் தெரிவித்துள்ளது.
புதிய செக் புக் எப்படி பெறுவது?
மேற்கொண்டு புதிய காசோலைப் புத்தகத்தை சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளை சென்று அணுகலாம் எனவும் தனது அறிக்கையில் பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஏடிஎம், இன்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட அதிகாரப்பூர்வமாக தளங்களிலும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ கட்டணமில்லா கஸ்டமர் கேர் நம்பரான 18001802222 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கட்டண சலுகை
மேலும் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி வரவிருக்கும் விழாக்கால பருவத்தையொட்டி, இதனுடன் கூடுதலாக சில சலுகைகளையும் அறிவித்துள்ளது. அது பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் பண்டிகையின் ஒரு பகுதியாக சில சில்லறை பொருட்களின் மீதான சேவை கட்டணங்களையும், செயல்பாட்டு கட்டணங்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
வீட்டுக் கடன்- கார் கடன்
இவற்றோடு வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் 6.60% ஆகவும், கார் கடனுக்கான வட்டி விகிதம் 7.15%ல் இருந்து ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளது. இது மேற்கொண்டு புதிய வாடிக்கையாளர்களை கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்திய வாரங்களாகவே தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் என போட்டி போட்டுக் கொண்டு வட்டி விகிதத்தினை குறைத்து வருகின்றன.
இந்த நிலையில் தான் பஞ்சாப் நேஷனல் வங்கியும் வட்டியை குறைத்துள்ளது. பஞ்சாப் வங்கியின் இந்த சலுகைகள் டிசம்பர் 31 2021 வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அலகாபாத் வங்கியின் அறிவிப்பு
அலகாபாத் வங்கியும் அடுத்த மாதம் முதல் கொண்டு தனது வாடிக்கையாளார்களின் காசோலைப் புத்தகங்கள் மற்றும் எம் ஐ சி ஆர் குறியீட்டை செல்லாது என அறிவித்துள்ளது. புதிய செக் புக் மற்றும் புதிய சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் அருகில் உள்ள கிளையில் சென்று, புதிய காசோலை புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதோடு வாடிக்கையாளர்கள் இணைய வங்கியின் மூலமாகவும், மொபைல் பேங்கிங் மூலமாகவோ கூட இதற்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
ட்விட்டரில் அறிவிப்பு
இது குறித்து இவ்வங்கிகள் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளன. ஆக உங்களது செக் புக் மற்றும் IFSC கோடு என செல்லாமல் போகும் முன்பே சென்று மாற்றிக் கொள்ளலாம். இல்லையெனில் உங்களது இணைய வங்கி பரிவர்த்தனைகள் கூட பாதிக்கப்படலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications