இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State bank of india), அவ்வப்போது வாடிக்கையாளர்களின் நலனை காக்கும் விதமாக பல அதிரடியான அறிவிப்புகளை கொடுத்து வருவது வழக்கம்.
பல தனியார் வங்கிகளுக்கும் சவால் விடும் வகையில் செயல்பட்டு வரும் இந்த வங்கி, வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்களையும் அறிவித்து வருகின்றது.
அதோடு பல்வேறு சேவைகளை மக்கள் தற்போது ஆன்லைனிலேயே பெறும் வசதியினையும் வழங்கி வருகின்றது. இதன் மூலம் கொரோனா காலத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல், பல்வேறு வகையான சேவைகளை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ள முடியும்.
செக் பேமெண்டினை எப்படி நிறுத்துவது?
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது, எஸ்பிஐ (SBI) வாடிக்கையாளர்கள் எப்படி தங்களது செக் பேமெண்டினை ஆன்லைனில் நிறுத்தி வைப்பது என்பதை தான். இதற்காக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. இருந்த இடத்தில் இருந்தபடியே இதனை செய்ய முடியும் என்கிறது எஸ்பிஐ.
எப்படி எல்லாம் அப்டேட் செய்யலாம்?
இதனை ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் செய்து கொள்ள முடியும். அதோடு எஸ்பிஐயின் பிரபல சேவையான எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாகவும், எஸ்பிஐ யோனோ லைட் ஆப் மூலமாகவும் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவித்துள்ளது. இதற்காக உங்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் வேண்டும்.
என்ன காரணம்
நீங்கள் செக் பேமெண்டினை நிறுத்த பல்வேறு வகையான காரணங்கள் உண்டு. உதாரணத்திற்கு நீங்கள் தவறான தொகையை மதிப்பிட்டு இருக்கலாம். இதனால் அதனை ரத்து செய்ய நினைக்கலாம். நீங்கள் அதிக தொகைக்கு செக்கினை கொடுத்திருக்கலாம். ஆனால் வங்கிக் கணக்கில் தொகை குறைவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஸ்டாப் பேமெண்ட் ஆப்சனை பயன்படுத்த வேண்டியிருக்கும்.
ஆன்லைனில் எப்படி?
இதற்காக நீங்கள் எஸ்பிஐ அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று உங்களது இணைய வங்கியினை லாகின் செய்து கொள்ளுங்கள்.
அதில் e-services என்ற ஆப்சனுக்கு கீழாக உள்ள Stop cheque payment என்ற ஆபசனை கிளிக் செய்யவும்.
அதோடு எந்த கணக்கு என்ற விவரங்கள் உள்ளிட்டவற்றை பதிவிட்டு பிறகு, நிபந்தனைகளைகள் மற்றும் விதிமுறைகள் என்பதை கிளிக் செய்து சப்மிட் செய்ய வேண்டும்.
யோனோவில் எப்படி?
உங்களது கணக்கினை எஸ்பிஐ யோனோ ஆப் மூலாமாக லாகின் செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு request என்பதை கிளிக் செய்து, அதில் செக் புக் என்ற ஆப்சனில் உள்ள Stop cheque என்பதை கிளிக் செய்யவும்.
அதில் செக்கின் தேவையான விவரங்களை பதிவிட்டு, ஸ்டாப் என்ற ஆப்சனை தேர்தெடுக்கவும்.
அதன் பிறகு விவரங்கள் சரி பார்க்கப்பட்டு, சப்மிட் கொடுக்கவும். உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.
வங்கிக் கிளைக்கு நேரடியான சென்றும் நிறுத்தலாம்
வங்கி கிளைக்கு நேரடியாக சென்றும் உங்களது செக் பேமெண்டினை நிறுத்தம் செய்யலாம். இதற்காக ஒரு கடிதம் கொடுக்க வேண்டியிருக்கும். இதனை கொடுத்த பிறகு உங்களது பேமெண்ட் நிறுத்தம் செய்யப்படும். எப்படியிருப்பினும் ரிசர்வ் வங்கியின் பாசிட்டிவ் பே சிஸ்டம் மூலம் 50,000 ரூபாய்க்கு மேலாக பரிவர்த்தனை செய்யப்படும் பட்சத்தில், உங்களிடம் மீண்டும் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே செயல்படுத்தப்படும். எஸ்பிஐயில் இந்த திட்டம் ஜனவரி 1, 2021ல் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications