இந்திய அரசு, கடன் வாங்கும் இலக்கை கொரோனா வைரஸ் பாதிப்பதற்கு முன்பு 7.8 லட்சம் கோடி ரூபாயாக வைத்திருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகளைச் சரி செய்ய, நிறைய பணம் தேவைப்படுகிறது.

எனவே கடந்த வெள்ளிக்கிழமையே, மத்திய அரசு, கடன் வாங்குவதற்கான இலக்கை 12 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறார்கள். இந்த தீர்மானத்தை மத்திய அரசு தன்னிச்சையாக எடுக்காமல், மத்திய ரிசர்வ் வங்கி உடன் கலந்தாலோசித்த பின் தான் எடுத்து இருக்கிறார்களாம்.
இன்று மே 11. 2020 முதல் ஒவ்வொரு வாரமும் அதிகபட்சமாக 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாண்டுகள் ஏலம் விடப்படுமாம்.
30,000 கோடி ரூபாய்க்கு 2 வருட பாண்டுகள்
1.2 லட்சம் கோடி ரூபாய்க்கு 5 வருட பாண்டுகள்
1.8 லட்சம் கோடி ரூபாய்க்கு 10 வருட பாண்டுகள்
1.1 லட்சம் கோடி ரூபாய்க்கு 14 வருட பாண்டுகள்
70,000 கோடி ரூபாய்க்கு 30 வருட பாண்டுகள்
50,000 கோடி ரூபாய்க்கு 40 வருட பாண்டுகள்
40,000 கோடி ரூபாய்க்கு 2 வருட பாண்டுகள்
என இந்த 2020 - 21 நிதி ஆண்டின், முதல் அரையாண்டுக்குள் 6 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு திரட்ட இருக்கிறதாம்.
இதனால் பாண்டுகளுக்கான வருமான விகிதம் (Bond Yield) அதிகரித்து இருக்கிறது. வழக்கம் போல பாண்டுகளின் வருமான விகிதம் (Bond Yield) அதிகரித்தால், பாண்டுகளின் விலை சரியும். அதே போல இந்த முறையும் பாண்டுகள் விலை சரிந்து இருக்கிறது.
10 ஆண்டுகளுக்கான பாண்ட்களின் வருமான விகிதம் (Bond Yield) 5.98 %-ல் இருந்து, 6.19 %-மாக அதிகரித்து இருக்கிறது. இது கடந்த பிப்ரவரி 2017-க்குப் பின், 10 வருட பாண்டுகள் காணும் மிகப் பெரிய வருமான விகித ஏற்றம் என்கிறார்கள்.
பொதுவாக நிறைய பாண்டுகள் சந்தைக்கு வரும் போது, ஒரு பக்கம் பாண்டுகளின் விலை குறையும், மறு பக்கம் பாண்டுகளின் வருமான விகித அதிகரிக்கும்.
அது தான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. இந்திய பாண்டு சந்தைகளில், இப்படி திடீரென எதிர்பார்த்ததை விட கிட்டத்தட்ட 54 சதவிகிதம் அதிக பாண்டு பத்திரங்கள் வரத் தொடங்கி இருக்கின்றன.
7.8 லட்சம் கோடிக்கு பதிலாக 12 லட்சம் கோடி வரப் போகிறது என்பதால், பாண்டுகளின் வருமான விகிதங்கள் அதிகரித்துவிட்டன, அதற்கு நேர்மாறாக வழக்கம் போல பாண்டுகளின் விலை சரியத் தொடங்கி இருக்கின்றன.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications