பென்ஷன் இல்லாமல் பணி செய்யும் ஊழியர்களின் நிதி பாதுகாப்புக்காக புதிய பென்ஷன் பிளஸ் என்ற திட்டத்தை எல்ஐசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்தவர்கள் தங்கள் ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்கும் வகையில் இருக்கும்.
இந்த திட்டம் நேற்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த திட்டத்தின் ஆரம்ப விழாவில் எல்ஐசி மற்றும் செபி நிறுவனங்களின் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய பென்ஷன் பிளஸ் திட்டம்
பென்ஷன் என்பது ஒவ்வொரு ஊழியர்களுக்கும் முக்கியமானது என்பதும் ஓய்வு காலத்தில் அதுதான் அவர்ளது அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பென்ஷன் இல்லாமல் நிதி பாதுகாப்பு இன்றி பணி செய்யும் ஊழியர்களின் நலனுக்காக புதிய பென்ஷன் பிளஸ் என்ற திட்டத்தை எல்ஐசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பங்குச்சந்தையுடன் தொடர்பு இல்லை
நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த திட்டம், பங்குச் சந்தையுடன் தொடர்பில்லாத திட்டம் என்பதால் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் இந்த திட்டத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. எனவே தைரியமாக இதில் முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிரிவுகள்
இந்த திட்டம் மொத்தமாக ஒரே தவணையில் செலுத்தும் முறை அல்லது மாதம் அல்லது காலாண்டு, அரையாண்டு முறையில் முதலீடு செய்யும் திட்டம் என இரண்டு பிரிவுகள் உள்ளது.
பிரிமியம் தொகை
பாலிசி காலம் மற்றும் பாலிசிதாரரின் வயது, முதிர்வு தொகை ஆகியவற்றை பொறுத்து பிரிமியம் தொகை செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் நான்கு வகையான நிதிகள் இதில் இருப்பதாகவும் இதில் பாலிசிதாரர் தங்களுக்கு விருப்பப்பட்ட நிதிகளை தேர்வு செய்து முதலீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி முதலீடு செய்வது?
இந்த திட்டத்தில் சேர்ந்த பணத்தை ஐந்து ஆண்டுகளுக்கு பின் பாதியாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும். இந்த பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய நேரடியாக எல்ஐசி அலுவலகத்திற்கு சென்றோ அல்லது எல்ஐசி ஏஜெண்டுகள் வாயிலாகவோ முதலீடு செய்யலாம். மேலும், https://licindia.in/ இணையதளம் வாயிலாகவும் முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு காலம்
நிலையான வருவாய் உள்ள இன்றைய இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்தால் அவரது ஓய்வு காலம் சுமை இன்றி சுகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications