இந்தியாவின் மிகப் பெரிய வங்கி என்கிற பெயரை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தான் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது.
அதிக வாடிக்கையாளர்கள், நிறைய கடன் கொடுத்து இருப்பது, நிறைய வங்கிக் கிளைகளை வைத்திருப்பது, நிறைய ஊழியர்கள் வேலை பார்ப்பது என பலவற்றிலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தான் நம்பர் 1.
அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட வங்கி என்பதால், நிறைய வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட எச்சரிக்கைகளையும் எஸ்பிஐ வங்கி செய்து வருகிறது. இந்த முறை ஆன்லைன் மோசடி செய்பவர்கள், வாட்ஸப்பை குறி வைத்து களம் இறங்கி இருக்கிறார்கள். அதைக் குறித்து எச்சரித்து இருக்கிறது எஸ்பிஐ.
Whatsapp-ல் வலை விரிக்கும் மோசடி கும்பல்
ஆன்லைன் மோசடி செய்பவர்கள், தற்போது லாட்டரி ஜெயித்து இருப்பதாகச் சொல்லி, ஒரு எஸ்பிஐ எண்ணைக் கொடுத்து அழைக்கச் சொல்கிறார்கள். அதன் பிறகு அழைத்து பேசி, வங்கி விவரங்களை எல்லாம் தெரிந்து கொண்டு மோசடி செய்கிறார்கள். இது குறித்து, எஸ்பிஐ தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், தன் வாடிக்கையாளர்களை எச்சரித்து இருக்கிறது.
எஸ்பிஐ எச்சரிக்கை
எஸ்பிஐ எப்போதும் வாடிக்கையாளர்களை அழைத்து அவர்களின் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது வங்கிக் கணக்கு விவரங்களையோ, இ மெயில், எஸ் எம் எஸ், வாய்ஸ் கால், வாட்ஸப் கால்... வழியாக எப்போதும், கேட்காது எனச் சொல்லி இருக்கிறது எஸ்பிஐ. அதே போல, எஸ்பிஐ எந்த ஒரு லாட்டரி திட்டத்தையும் நடத்தவில்லை. எனவே வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரித்து இருக்கிறது எஸ்பிஐ.
மோசடிக்காரர்கள் காத்திருக்கிறார்கள்
ஆன்லைனில் பணத்தைப் பறிக்கும் மோசடிதாரர்கள், நாம் தவறு செய்யக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். போலியாக, எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு வரும் கால்களையோ, வாடிக்கையாளர்களுக்கு வரும் போலி எஸ் எம் எஸ்-களையோ நம்ப வேண்டாம் எனவும் சொல்லி இருக்கிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.
புது ரூட்
இத்தனை நாள், எஸ் எம் எஸ், வாய்ஸ் கால் வழியாக வந்து கொண்டு இருந்தவர்கள், தற்போது வாட்ஸப்பில் களம் இறங்கத் தொடங்கி இருக்கிறார்கள். வங்கிகளும் தங்கள் தரப்பில் இருந்து மக்களை எச்சரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். நாமும் வங்கி மற்றும் பணம் சார்ந்த விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் உஷாராக இருக்க வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications