டெல்லி: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), அதன் கார்டுகள் மற்றும் பேமெண்ட் சேவைகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள் ஜனவரி 2023 முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்த புதிய விதிகளால் யாருக்கு என்ன பலன்? குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு என்ன பலன் வாருங்கள் பார்க்கலாம்..
எஸ்பிஐ கிரெடிட் கார்டில் கிடைக்கும் ரிவார்டு புள்ளிகளில் தான், ஜனவரி, 2023 முதல் புதிய மாற்றம் அமல்படுத்தப்படவுள்ளது.
2 விதிகள் மாற்றம்
எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வவுச்சர் மற்றும் ரிவார்டு பாயிண்டுகளைப் பெறுவதற்கான 2 விதிகள் 2023ம் ஆண்டு முதல் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சிம்பிளிக்ளிக் கார்டுகளுக்கு வழங்கப்படும் க்ளியர்ட்ரிப் வவுச்சரை ஒரே ஒரு ட்ரான்ஸாஷனில் மட்டுமே பெற முடியும். இதனை வவுச்சருவுடன் இணைக்க முடியாது. இந்த நடைமுறையானது ஜனவரி 6, 2023 முதல் அமலுக்கு வரவுவுள்ளது.
ரிவார்டு பாயிண்டுகளில் மாற்றம்
ஜனவரி 1 முதல் அமேசான்.இன்-ல் சிம்ப்ளிக்ளிக் மூலம் ஆன்லைனில் கிடைக்கும் ரிவார்டுகள் தொடர்பான விதிகளிலும் மாற்றம் செய்யப்படும். அமேசானில் சிம்பிளி க்ளிக் ரிவார்டு பாயிண்ட்கள் பெற்றுவந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை ஜனவரி 1 முதல் 5X ரிவார்டு பாயிண்டுகளாக குறைக்கப்படும்.
10 ரிவார்டு புள்ளிகள் யாருக்கு?
எனினும் அப்பல்லோ 24X7, க்ளியர்ட்ரிப், லென்ஸ்கார்ட், நெட்மெட்ஸ், புக்மைஷோ, ஈஸிடைனர் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் 10X ரிவார்டு புள்ளிகள் கிடைக்கும் என எஸ்பிஐ கார்ட்ஸ் & பேமெண்ட்ஸ் சேவை தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளது.
செயல்பாட்டுக் கட்டணம்
எஸ்பிஐ கார்டு நவம்பர் 15, 2022 முதல் இந்த கட்டணங்களை மாற்றம் செய்யப்பட்டது. இதன் படி வணிகர் இ எம் ஐ பரிவர்த்தனைகளுக்கான செயல்பாட்டுக் கட்டணம், வரிகளுடன் சேர்த்து 199 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்னதாக 99 ரூபாயாக இருந்தது. இதன் மூலம் இனி வாடிக்கையாளர்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர்.
மொத்தத்தில் இனி எஸ்பிஐ வாடிக்கையாளார்கள் இனி ஆன்லைனில் தங்களது கிரெடிட் கார்டினை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications