நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, மிகப் பெரிய கடன் வழங்குனராகும். இவ்வங்கி அதன் மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் ரேட்டினை (MCLR) அதிகரித்துள்ளது.
இந்த வட்டி அதிகரிப்பானது நவம்பர் 15 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த வட்டி அதிகரிப்பில் 15 அடிப்படை புள்ளிகள் வட்டியானது அதிகரித்துள்ளது.
இந்த வட்டி அதிகரிப்பால் எஸ்பிஐ-யில் எம்சிஎல்ஆருடன் இணைந்து கடன் வாங்கியோருக்கு மாத தவணை கடுமையாக அதிகரிக்க வழிவகுக்கும். இதன் மூலம் இனி வாடிக்கையாளர்கள் மாத மாதம் அதிகமான தொகையை செலுத்த வேண்டியிருக்கும். எம் சி எல் ஆர் விகிதம் அதிகரித்து இருந்தாலும், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை மட்டும் குறைத்து, சில சலுகைகளையும் வங்கி அறிவித்துள்ளது. இது வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையலாம்.
வட்டி அதிகரிப்பு
எஸ்பிஐ-யின் இந்த வட்டி அதிகரிப்பின் படி எம்சிஎல்ஆர் விகிதம் - 7.60% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே ஓராண்டு எம்சிஎல்ஆர் விகிதம் 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 8.05% ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்த விகிதத்தில் கடன் வாங்கியோர் கூடுதலாக மாத தவணை அதிகரிக்கலாம். இது முன்னதாக 7.95% ஆக இருந்தது.
2 அல்லது 3 வருட எம்சிஎல்ஆர்
இதே 2 வருட எம்சிஎல்ஆர் விகிதம் மற்றும் மூன்று வருட எம்சிஎல்ஆர் விகிதம் 8.15% மற்றும் 8.25% ஆக இருந்தது. இது தற்போது 10 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு 8.25% மற்றும் 8.35% ஆகவும் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் வீட்டுக் கடன், ஆட்டோ லோன் மற்றும் தனி நபர் கடன்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மாத தவணை தொகையானது அதிகரிக்கலாம்.
வீட்டுக் கடன் விகிதம்
பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இது நவம்பர் 14, 2022 முதல் 8.25% ஆக கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தள்ளுபடி சலுகையானது குறிப்பிட்ட காலம் மட்டுமே எனவும் அறிவித்துள்ளது. இது டிசம்பர் 31,2022 வரையில் கிடைக்கும் என அறிவித்துள்ளது. மேலும் இந்த சலுகையின் கடனை முன் கூட்டியே செலுத்தவும், பகுதியாக செலுத்தவும் கட்டணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
வேறு என்ன சலுகைகள்
இந்த வட்டி அதிகரிப்பு மற்றும் குறைப்பானது புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் பேலன்ஸ் டிரான்ஸ்பர்களுக்கும் கிடைக்கும் என அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோரினை அடிப்படையாக கொண்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சலுகையில் வட்டி கூறைப்பு மட்டும் அல்லாது, செயல்பாட்டு கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
எப்படி பாதிப்பு?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எம்சிஎல்ஆர் மூலம் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு, இதன் மூலம் மாத மாதம் வட்டி அதிகரிப்பால் தவணை அதிகரிக்கலாம். அதேசமயம் வீட்டுக் கடனுக்கான சலுகை மூலம் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைவாகவும் பலன் பெறலாம். எம்சிஎல்ஆர் விகிதத்தின் அடிப்படையில் கடன் வாங்கும்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யும்போதெல்லாம் இதிலும் அதிகரிக்கலாம். குறையும் போது குறையலாம். ஆக உங்களுக்கு எது பொருந்துமோ? அதனை திட்டமிட்டு பயன்பெறலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications