நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனியார் துறை வங்கிகளுக்கு இணையாக அதிரடியாக பல சலுகைகளை வழங்கி வருகின்றது.
அதிலும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களை பாதுகாப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றது. அதற்காக பல வசதிகளையும் செய்து வருகின்றது.
தற்போது அந்த வகையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கி ஏடிஎம்களில் பேலன்ஸ் செக் செய்யும் போதோ அல்லது மினி ஸ்டேட்மெண்ட் எடுக்கும்போதோ, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் வர அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
SMS அலர்ட் வரும்
இப்படி ஒரு அதிரடியான அம்சத்தினை தான் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. இதன் காரணமாக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், மோசடிகளில் இருந்து தப்பிக்கவும் இது வழி வகுக்கும். ஒரு வேளை உங்களது ஏடிஎம்களை வைத்து வேறு யாரேனும், பேலன்ஸ் செக் செய்தாலோ அல்லது மினி ஸ்டேட்மெண்ட் எடுத்தாலோ, உங்களது ரிஜிஸ்டர் மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் வரும்.
ஏடிஎம்-களை பிளாக் செய்ய முடியும்
இந்த எஸ்எம்எஸ்-ஸின் மூலம் வாடிக்கையாளர்கள் நடக்க விருக்கும் மோசடிகளை தவிர்க்க முடியும். ஏனெனில் வாடிக்கையாளர்கள் ஒரு வேளை வாடிக்கையாளர்கள் உங்களது ஏடிஎம் கார்டு தவறாக பயன்படுத்தப் போவதாக நினைத்தால், உடனடியாக உங்களது ஏடிஎம்களை பிளாக் செய்ய முடியும். கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இத்தகைய மோசடிகளை தவிர்க்கும் நோக்கில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இத்தகைய சேவையை அறிவித்துள்ளது.
எஸ்எம்எஸ்களை தவிர்க்க வேண்டாம்
ஆக வாடிக்கையாளர்கள் இத்தகைய எஸ் எம் எஸ்கள் உங்களது மொபைலுக்கு வரும் போது தவிர்க்க வேண்டாம் எனவும் கூறியுள்ளது. இதற்கு முன்பு ஏடிஎம்மில் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும் போது மட்டும் இந்த அலர்ட் வரும். இதன் மூலம் வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்வோம். ஆனால் பேலன்ஸ் பார்ப்பது, ஸ்டேட்மெண்ட் எடுப்பது நடவடிக்கையின் போதே எஸ்எம்எஸ் வந்தால், வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே மோசடிகளை தவிர்க்க முடியும்.
வாடிக்கையாளர்களை பாதுகாக்க உதவும்
மேலும் மோசடியாளர்கள் உங்களது வங்கிக் கணக்கில் இருந்து எவ்வளவு தொகை இருக்கிறது என தெரிந்து கொள்ள கூட மினி ஸ்டேட் மெண்ட் எடுக்கலாம். ஆக இத்தகைய மோசடிகளுக்கு இடம் கொடுக்காமல் உடனடியாக வங்கியை அணுகி, உங்களது ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்யலாம். ஆக நிச்சயம் இது வாடிக்கையாளர்களை பாதுகாக்க உதவும்.
இதுவும் மிக நல்ல விஷயம்
அதோடு எஸ்பிஐ ஏடிஎம் இல்லாமல் பணத்தினை எடுக்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், டெபிட் கார்டை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இது ATM மோசடி, ATM குளோனிங் அபாயத்தை குறைக்கிறது. இதோடு இரவு எட்டு மணிக்கு மேல் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். ஆக அப்போதும் மோசடிகளில் இருந்து உங்களால் விலகி இருக்க முடியும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications