சியாட்டில்: ஆன்லைன் சில்லறை விற்பனையில் முன்னோடியாக திகழும் அமேசான் நிறுவனம், மேலும் ஒரு புதிய சேவையை தனது விற்பனை தளத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் 1999ஆம் ஆண்டு அறிமுகம் செய்த ஏல விற்பனையை சில மாதங்களிலேயே முடக்கியது. இத்திட்டத்தை தற்போது தூசு தட்டி மீண்டும் துவக்கியுள்ளது அமேசான்.
இச்சேவையில் சுமார் 15,000 பொருட்களை விற்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் பல நுண்கலை பொருட்கள் மற்றும் அறிய வகையான நாணயங்கள் என பல பொருட்களை விற்க மூன்றாம் தரப்பு விற்பனையாளர் ஆர்வம் காட்டியுள்ளனர் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1999ஆம் ஆண்டு முயற்சி
அமேசான் நிறுவனம் இது போன்ற ஆன்லைன் ஏல விற்பனை தளத்தை 1999ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது, ஆனால் இத்திட்டம் ஈபே நிறுவனத்துடன் போட்டி கொடுக்க முடியாமல் முடங்கி போனது.
விற்பனையாளர்கள்
மேலும் அமேசான் நிறுவனத்தில் 40 சதவீத விற்பனையாளர், தங்களின் வர்த்தகத்தில் சிறப்பான லாபத்தை பெற்று வருவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேரம் பேசும் வசதி
மேலும் அமேசான் மார்கெட்பிளேஸ் பிரிவின் தலைவர் பீட்டர் கூறுகையில்," பொதுவாக அனைத்து விற்பனையாளர்களும் பேரம் பேசும் வசதி கொண்ட தளத்தை நாடுகின்றனர், இதன் மூலம் அவர்கள் தங்களின் வர்த்தகத்தை பெருக்க முடியும் என தெரிவிக்கின்றனர்" என அவர் கூறினார்.
மேக் ஏன் ஆஃபர்
இந்த ஏல விற்பனை திட்டத்தின் பெயர் மேக் ஏன் ஆஃபர், இந்த ஏலத்தில் அளிக்கப்படும் விலையை ஒரு விற்பனையாளர் 72 மணிநேரத்தில் நிரகாரிக்கவும், ஏற்றுக்கொள்ள முடியும், அதேபோல் வாடிக்கையாளர் 72 மணிநேரத்தில் விலை அறிவிப்பை நீக்கவும், மாற்றவும் முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விரிவாக்கம்
மேலும் இத்திட்டத்தை 2015ஆம் ஆண்டிற்கு பின் விரிவாக்கம் செய்யவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications