அமேசான் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தங்களது ஊழியர்களின் ஒரு நாள் குறைந்தபட்ச ஊதியத்தினை அடுத்த மாதம் முதல் 15 டாலராக உயர்த்தி அறிவித்துள்ளது. அமேசானில் ஊழியர்களுக்குக் குறைந்த அளவிலான சம்பளம் மட்டுமே அளிக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அமேசான் இந்த முடிவினை எடுத்துள்ளது.
இதனால் அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க ஊழியர்களுக்கு வருகின்ற நவம்பர் 1-ம் தேதி முதல் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு 1100 ரூபாய்ச் சம்பளமாகக் கிடைக்கும்.
ஊழியர்கள் எண்ணிக்கை
உலகின் இரண்டாம் மிகப் பெரிய மதிப்பு வாய்ந்த நிறுவனமான அமேசான் எடுத்துள்ள இந்த முடிவினால் 3,50,000 ஊழியர்கள் பயனடைய உள்ளார்கள்.
போட்டி நிறுவனங்கள்
அமேசான் நிறுவனம் தங்களது போட்டி நிறுவனங்களான வால்மார்ட் மற்றும் டார்கெட் கார்ப் நிறுவனங்களை விட 3 டாலர் அதிக ஊதியத்தினை அளிக்க உடிவு செய்துள்ளது. இதனால் வால்மார்ட் மற்றும் டார்கெட் கார்ப் நிறுவனங்களும் விரைவில் தங்களது ஊழ்யியர்களின் சம்பளத்தினை உயர்த்தவும் வாய்ப்புகள் உள்ளது.
ஏன்?
அமெரிக்காவில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை தற்போது 20 வருடம் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ள நிலையில் அமேசான் நிறுவனம் ஊழியர்களுக்கு இந்த உதிய உயர்வினை அளித்துள்ளது அவர்களைத் தக்கவைத்துக்கொள்ளவே என்றும் கூறப்படுகிறது.
அமேசானின் போட்டி நிறுவனங்கள் பலவும் தற்போது புதியதாக ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளன. இதனால் எங்கு ஊழியர்களை வெளியேறினால் புதிய ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமோ என்றும் அமேசான் இந்த இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
அமேசான் ஃபுல்ஃபில்மெண்ட் செண்ட்டர்
அமேசானின் ஃபுல்ஃபில்மெண்ட் செண்ட்டர்களில் உள்ள ஊழியர்களுக்குப் பல நன்மைகள் மறுக்கப்படுவதாகவும் அவர்களைக் கழிவறைக்குச் சென்று வரவும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அதனால் பாட்டல்களில் சிறு நீர் கழிப்பதாகவும் இதனால் அவர்கள் மன வருத்தம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
யாருக்கெல்லாம் இந்த ஊதிய உயர்வு?
முழு நேரம், பகுதி நேரம், தற்காலிகம் மற்றும் சீசனல் ஊழியர்கள் என அனைவருக்கும் இந்த ஊதிய உயர்வு நவம்பர் 1 முதல் இருக்கும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.
இந்திய ஊழியர்கள்
இந்த ஊதிய அமெரிக்கர்களுக்கு மட்டும் தான் என்றும் பிற நாடுகளின் ஊழியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு நன்மை கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் கூறுகின்றனர்.
அமேசான்
ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்து உலகின் 1 டிரில்லியன் டாலர் சந்தை முதலீட்டினை பெற்ற இரண்டாம் மிகப் பெரிய நிறுவனம் என்ற பெயரினை அமேசான் பெற்றுள்ளது.
ஜெப் பிசோஸ்
அமேசான் நிறுவனரான ஜெப் பிசோஸ் பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் என்ற பெயரினையும் பெற்றுள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications