சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இலங்கையில், அசாதரணமான சூழல் இருந்து வருகின்றது.
இதற்கிடையில் பலரும் இலங்கையை போலவே பங்களாதேஷ்-ம் வீழ்ச்சி காணலாம் என கூறி வருகின்றனர்.
நிபுணர்களின் இந்த கருத்தினை நிராகரித்த பிரதமர் ஷேக் ஹசீனா, கொரோனா தாக்குதல், உக்ரைன் - ரஷ்யா பிரச்சனை என பல மோசமான காரணிகள் இருந்தபோதிலும், பங்களாதேஷின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக இருந்து வருகின்றது.
சவால்களை தாண்டி செயல்பாடு
தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் தற்போது சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இது பங்களாதேஷ்-க்கு மட்டும் அல்ல. எனினும் எங்கள் பொருளாதாரம் வலுவாக இருந்து வருகின்றது.
கடனையும் சரியாக செலுத்தி வருகின்றோம். பங்களாதேஷின் கடன் விகிதமும் குறைவு. எங்களுடைய பொருளாதாரம் சரியாக திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பங்களாதேஷ் பிரதமர் தெரிவித்துளார்.
பொருளாதாரம் வலுவான செயல்பாடு
திட்டமிடப்பட்ட காரணிகளுக்கு மத்தியில் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. மேற்கோண்டு நாங்கள் எந்த கடனையும் வாங்கவில்லை. மொத்த உலகமும் பிரச்சனையை எதிர்கொண்டு இருக்கிறது. நாங்களும் எதிர்கொண்டுள்ளோம். எனினும் இது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. பலரும் பங்களாதேஷூம் இலங்கையை போல பிரச்சனை எதிர்கொள்ளலாம் என எச்சரித்து வருகின்றனர் ஆனால் நிச்சயம் அதுபோல நடக்காது
வளர்ச்சிகான திட்டம்
ஏனெனில் நாங்கள் அனைத்து வளர்ச்சிக்கான திட்டத்தினையும் திட்டமிட்டுள்ளோம். அதேபோல எந்த திட்டத்தினையும் தொடங்குவதற்கு முன்பு, அது மக்களுக்கு பயனுள்ளதா என யோசித்து முடிவு எடுக்கிறோம் ஆக நாங்கள் எந்த திட்டத்தினையும், தற்போதைக்கு கையில் எடுக்கவில்லை. அதற்காக எந்த பணத்தையும் செலவிடவில்லை.
வீணாக செலவு செய்யவில்லை
பங்களாதேஷ் ஒரு வேளை ஏதேனும் திட்டத்தினை கையில் எடுக்கிறது எனில். அதனால் மக்களுக்கு என்ன பயன் என யோசிக்கும். எப்படி பொருளாதாரத்தினை மேம்படுத்துவது, மக்கள் எப்படி பயனடைய போகிறார்கள். மக்களின் நலனே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆக நாங்கள் வீணாக எந்த பணத்தினையும் செலவு செய்ய மாட்டோம் என பிரதமர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
கடன் பொறி
பல நிபுணர்களும் இலங்கையின் வீழ்ச்சிக்கு சீனாவின் கடன் விகிதமே காரணம் என நினைக்கிறார்கள். இது கடன் பொறிகளாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாடு அதனை நிர்வகிக்கும் விதமாக திட்டங்களை வைத்துள்ளது என்றும் ஹசீனா தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications